Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சொத்துகுவிப்பு வழக்கு மீண்டும் சிக்கிய பொன்முடி….உயர்நீதிமன்றம் அதிரடி…

Oredesam by Oredesam
August 11, 2023
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
விடுதலை செய்யப்பட்ட  அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

raid

FacebookTwitterWhatsappTelegram

சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி, லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க, ‘நோட்டீஸ்’ அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சி செய்த 1996 – 2001ம் காலகட்டத்தில் , பொன்முடி, அமைச்சராக பதவி வகித்தார். 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மாறியதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மற்றும் மாமியார், நண்பர்களுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை 2002ல் வழக்குப் பதிவு செய்தது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்தது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம். இதே தீர்ப்பை உயிநீதிமன்றமும் உறுதி செய்த்து. இதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, வழக்கு மீண்டும் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது; 169 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.

இந்நிலையில், வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக, 2022 மே மாதத்தில், நான்கு விடுமுறை நாட்களில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்துக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி கடிதம் அனுப்பினார். அதை உயர் நீதிமன்றம் நிராகரித்து, 2022 ஜூன் 7ல் உத்தரவிட்டது. அதோடு, மறு உத்தரவு வரும் வரை, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க தடையும் விதித்தது.

அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களின் நிர்வாகத்துக்கான உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர், இந்த வழக்கை, வேலுாரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதிக்கு மாற்றும்படி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு, 2022 ஜூலை 8ல் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வழக்கை, வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் அலுவல் ரீதியான உத்தரவை, ஜூலை 12ல் பிறப்பித்தது.

அதன்படி, ஜூலை 16ல், வேலுாருக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை, மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா விசாரித்தார். வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து, தீர்ப்பு வழங்கினார். அதே மாதத்தில், பணி ஓய்வும் பெற்றார்.

தற்போது, இந்த வழக்கை, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கான எதிரான வழக்குகளை, உயர் நீதிமன்றத்தில் விசாரிப்பவர், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

விழுப்புரம் நீதிமன்றத்தில் பெரும்பாலும் விசாரணை முடியும் தருவாயில், வேலுார் நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றப்பட்டதாக, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிய நடைமுறையில் தவறு நடந்திருப்பதை உணர முடிந்தது.

இவ்வழக்கில் இறுதி வாதங்கள், 2023 ஜூன் 23ல் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு, நான்கு நாட்களில், 226 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி எழுத முடிந்ததும் கவனத்துக்கு வந்தது.

விசித்திரமாக நடந்த வழக்கு

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதியும், 2023 ஜூன் 30ல் ஓய்வு பெற்றுள்ளார். எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பதால், வேலுார் நீதிமன்றத்தில் இருந்த வழக்கின் ஆவணங்களை வரவழைத்து பார்த்தேன்.

அவற்றை படிக்கும் போது, இந்த வழக்கில் வினோதமான நடைமுறையை, இந்த நீதிமன்றம் அனுமதித்தது குறித்து எழுந்த சந்தேகம் சரிதான் என்பது நிரூபணமானது.

ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பில் இருந்த இந்த வழக்கு, 2023 ஜூன் 6ல் சுறுசுறுப்பு எடுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகி வரிசை கட்டி நின்றனர். அவர்கள் தரப்பு சாட்சியிடம், ஜூன் 6ல் விரைந்து விசாரணை நடந்தது. ஜூன் 23ல் எழுத்துப்பூர்வ வாதங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

நான்கு நாட்களில், 172 சாட்சிகள், 381 ஆவணங்களை பரிசீலித்து, 226 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி பிறப்பித்துள்ளார்; ஜூன் 30ல் நீதிபதி ஓய்வு பெற்றார். இவற்றை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

ஆவணங்களை ஆராய்ந்ததில், 2023 ஜூன் 7ல் இருந்து சட்டப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பது தெரிகிறது. சந்தேகத்துக்குரிய விசாரணை மாற்ற நடைமுறை, அதைத் தொடர்ந்து நடந்த விசாரணை மற்றும் தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என, என் கவனத்துக்கு வந்தது.

அதனால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ், எனக்குள்ள அதிகாரங்களை செயல்படுத்த முடிவெடுத்தேன். நீதி நிர்வாகத்தை குறைவுபடுத்தும் முயற்சி நடப்பதால், வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன்.

அவசரம் என்ன? பல கேள்விகள் எழுகின்றன…

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தடை விதித்து, அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்க, உயர் நீதிமன்றத்துக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?

மே மாதத்தில், நீதிமன்றத்துக்கான விடுமுறை நாட்களில், விசாரணை நடத்த அனுமதி கேட்டு, விழுப்புரம் நீதிபதி கடிதம் அனுப்பினார். அதற்கு, ஜூன் 7ல் அலுவல் ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊழல் வழக்கை விசாரிக்க, விழுப்புரம் நீதிபதிக்கு தடை விதிக்க வேண்டிய அவசரம் என்ன?

நீதித் துறை பணிகளை மேற்கொள்ள தடை விதித்து, அலுவல் ரீதியான உத்தரவு பிறப்பிப்பது, இதுவரை கேள்விப்படாதது. கீழமை நீதிமன்றங்களின் நீதித் துறை நடவடிக்கையில், நீதித் துறை வாயிலாக குறுக்கிட முடியும். ஆனால், அலுவல் ரீதியாக குறுக்கிடுவது சட்டவிரோதம்.

ஒரு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற நிர்வாக குழுவுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற, உயர் நீதிமன்றத்துக்கு தான் நீதித் துறை அதிகாரம் உள்ளது. நிர்வாக ரீதியில், நீதித் துறைக்கான அதிகாரங்களை நீதிபதிகள் செயல்படுத்த முடியாது. அதுவும், நிர்வாக ரீதியிலான குறிப்பு வாயிலாக முடியாது. நிர்வாக அதிகாரத்தை, நீதிபதிகள் அனைவரும் சேர்ந்து ஒருமித்து தான் செயல்படுத்த முடியும்.

வேலுார் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியதற்கு, எந்த காரணமும் இல்லை. எனவே, நிர்வாக ரீதியில், நிலுவையில் உள்ள வழக்கை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, இரண்டு நீதிபதிகளுக்கும் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. அதனால், வழக்கை வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்ற, நிர்வாக ரீதியில் நீதிபதிகள் குறிப்பெழுதி உத்தரவிட்டது சட்டவிரோதமானது.

நீதிபதிகளின் குறிப்புக்கு, தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருப்பது சட்டப்பூர்வமானதா?

நீதித் துறையைப் பொறுத்தவரை, நீதிபதிகளில் முதலானவர் தலைமை நீதிபதி; நிர்வாகத்தைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற நிர்வாகம், தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே வரும். யார் யாருக்கு எந்தெந்த வழக்குகளை ஒதுக்குவது என்பது, அவருக்கு உள்ள தனிப்பட்ட உரிமை.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வழக்கை மாற்ற, நிர்வாக ரீதியான அதிகாரம், தலைமை நீதிபதிக்கு இல்லை. அதனால், நிர்வாக நீதிபதிகளின் குறிப்புக்கு ஒப்புதல் அளித்ததும், சட்டப்படியானது அல்ல.

எனவே, வழக்கு விசாரணையை வேலுாருக்கு மாற்றியது; அதைத் தொடர்ந்து நடந்த விசாரணை; 226 பக்க தீர்ப்பு எல்லாம், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டவை.

விசாரணை நீதிமன்றத்தின் சட்டவிரோதத்தால், நீதி பரிபாலனம் தோல்வியடைவது கவனத்துக்கு வரும்போது, அதை சரி செய்ய வேண்டியது, உயர் நீதிமன்றத்தின் கடமை. பொது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதும் கடமை.

விளையாட்டு போட்டியில், ஒருபக்கத்துக்கு ஆதரவான நிலையை, நடுவர் எடுக்கிறார் என்ற எண்ணம், பொது மக்களுக்கு ஒருபோதும் ஏற்படக் கூடாது.

எனவே, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ‘நோட்டீஸ்’ பெற வேண்டும். பொன்முடி, அவரது மனைவிக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, செப்டம்பர் 7க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவின் நகலை, தகவலுக்காக, தலைமை நீதிபதி முன் பதிவுத் துறை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

vck

தொல்லை தரும் நிர்வாகிகள்! மேடையில் கண்ணீர் விட்டு அழுத வி.சி.க பெண் மாவட்ட செயலாளர்! இதுதான் விசிக சமூகநீதியோ?

August 14, 2023
தமிழகத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இடைதேர்தலா! திசை திருப்ப பா.ஜ.கவினர் கைது! வெளிவரும் உண்மை தகவல்!

தமிழகத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இடைதேர்தலா! திசை திருப்ப பா.ஜ.கவினர் கைது! வெளிவரும் உண்மை தகவல்!

October 18, 2021
திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா?  தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

சீனியர்களை ஓரம் காட்டினால் சேதாரம் அதிகம்.. தேர்தலுக்கு முன்னே சொல்லிருக்கலாம்ல…. வீதிக்கு வந்த திமுக சண்டை..

August 30, 2024
குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

குடும்ப தொழில் செய்யும் சூர்யா கூறும் மனுநீதி என்ன?

September 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x