மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.
டிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது.
எனக்கு ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பு கொண்டிருந்தேன், ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து GST கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சப்பை கட்டு காட்டினார்.மேலும் 3 பிளைட் மாறி செல்லவேண்டும் என்றெல்லாம் கூறினார்
இதனிடையே எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழக நிதி அமைச்சரை வச்சு செய்துவிட்டார்கள். ‘
இதனிடையே ட்விட்டரில் வளைகாப்பு ராஜன் என ட்ரெண்ட் செய்துவிட்டார்கள்!
இதன் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தி கருது ஒன்றிணை பதிவிட்டுள்ளார்.
வளைகாப்பு அமைச்சருக்கு மன நிலை சரியில்லையா (stable mental state)? – கேட்கிறார் அண்ணாமலை!ஏடாகூடமாக ட்வீட் போட்டு டிலீட் பண்ணியிருக்கிறார் வளைகாப்பு. அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்த அண்ணாமலை, “தன் பணியை ஒழுங்காக செய்ய, நிதிஅமைச்சருக்கு ஸ்திரமான, தெளிவான மன நிலை (clear, stable mental state) தேவை. அவரால் தமிழக நிதி நிலைக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது” என்ற ரீதியில் பகிர்ந்திருக்கிறார் “அண்ணா”.—> நல்ல ஸ்க்ரூ ஏத்தறார் அண்ணாமலை.
அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க ஜி. ஸ்டாலின் அவரை நீக்கினால், “அண்ணாமலையால் நடந்தது”, நீக்காவிட்டால், “மெண்டலுக்கு துணை போகிறாரா விடியல்?” என்று கேள்வி எழுப்பலாம். வளையல் ராஜினாமா செய்தால், “பயந்தாங்கொள்ளி” எனலாம். ராஜினாமா செய்யாவிட்டால், வைத்து செய்யலாம் என்று சமூகவலைத்தளத்தில் பாஜக ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















