பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்தியரசு அதிரடி !

சில மாதங்களுக்கு டிக்டாக் உட்பட 58 சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில்.

தற்போது இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு செயலியான பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் ஏற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சீனாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் சீனாவை சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளை பயன்படுத்த தடைவித்திருந்தது மத்திய அரசு.

தற்போது இதனைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக  மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version