Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

Oredesam by Oredesam
May 29, 2020
in செய்திகள்
0
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.
FacebookTwitterWhatsappTelegram

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25 முதல் அறிவிக்கப்பட்டது.  ஊரடங்கால் பெண்கள்தான் அதிக அளவில்  பாதிக்கப்படுவார்கள் என்பதால் பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பில் மகளிருக்கான பல உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை, உஜ்வாலா திட்டத்தில் 3 மாதங்களுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவித் திட்டமும் அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்புக்களுக்கு ஏற்ப புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் சிறப்புக் கடன்களை வழங்கத் தொடங்கின.  பொதுஊரடங்கால் வாழ்வாதாரம் மறந்து தவிக்கும் ஏழை மற்றும் கிராமப்புற மகளிருக்கு இந்தக் கடன் பேருதவியாக இருக்கிறது.  மகளிர் குழுவின் ஒரு பெண் உறுப்பினர் அதிகபட்சமாக ரூ.10,000 கடன் பெற்று வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். ஒரு குழுவாக அதிகபட்சம் ரூ.2லட்சம் கடன் பெறலாம்.  முதல் 6 மாதங்களுக்கு இந்தக் கடன்களுக்கான தவணைகளை கட்டத் தேவையில்லை.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கோவிட் உதவிக் கடன்களை வங்கிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வழங்கி வருகின்றன.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் இதுவரை (27-5-2020) மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடி கடனாக வழங்கி உள்ளன என்று புதுச்சேரி முன்னோடி வங்கி மேலாளர் ஏ.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.  புதுச்சேரி மாவட்டத்தில் 674 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 8848 உறுப்பினர்களுக்கு 8,41,75,000 ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.  அதே போன்று காரைக்கால் மாவட்டத்தில் 315 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 4296 உறுப்பினர்களுக்கு 3,62,35,000 ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமாக 989 சுயஉதவிக் குழுக்களின் 13,144 உறுப்பினர்களுக்கு 12,04,10,000 ரூபாய் கோவிட் சிறப்புக் கடனாக வழங்கப்பட்டு உள்ளது என்று முன்னோடி வங்கியின் மேலாளர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

இதில் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் இந்தியன் வங்கி 240 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 3041 மகளிருக்கு ரூ.2,85,45,000 தொகையும் புதுச்சேரி பாரதியார் கிராமிய வங்கி 364 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 4925 மகளிருக்கு ரூ.4,84,10,000 தொகையும் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி 20 மகளிர் குழுக்களின் 262 மகளிருக்கு ரூ.26,20,000 தொகையும் யுகோ வங்கி 28 மகளிர் குழுக்களின் 338 மகளிருக்குரூ.16,90,000 தொகையும் கடனாக வழங்கியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளில் இந்தக் கடன் வழங்கப்படுவதை தெரிந்து கொள்வதற்காக புதுச்சேரி மாவட்டத்தில் இந்தியன் வங்கியின் கூடப்பாக்கம் மற்றும் சேலியமேடு கிளைகளுக்குச் சென்றோம். கூடப்பாக்கம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் கே.ராஜா தனது கிளை மூலம் 28 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 364 உறுப்பினர்களுக்கு 34,80,000 ரூபாய் கடன் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.  அதே போன்று சேலியமேடு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிகரசுதன் கண்ணன் தனது கிளை மூலம் 23 குழுக்களைச் சர்ந்த 300க்கும் அதிகமான மகளிர் உறுப்பினர்களுக்கு 32,00,000 ரூபாய் கடன் தந்து உள்ளதாக கூறினார்.  இந்த 2 வங்கிக் கிளைகளிலும் கோவிட் உதவிக் கடன் பெற்ற சில மகளிரிடம் கருத்துக் கேட்டோம்:

பிரியங்கா, ஸ்ரீசாய்பாபா மகளிர் குழு, கூடப்பாக்கம்: நான் அழகுக் கலை நிபுணராக இருக்கிறேன்.  ஊரடங்கால் வாங்கி வைத்த அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன.  என்ன செய்வது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது மத்திய அரசு அறிவித்த மகளிர் குழு கடனான 10,000 ரூபாய் இந்தியன் வங்கி மூலம் கிடைத்தது.  அதன் மூலம் புதியதாக பொருட்களை வாங்கி மீண்டும் தொழிலைத் தொடங்கி உள்ளேன்.  மத்திய அரசுக்கும் இந்தியன் வங்கிக்கும் நன்றி.

கோவிந்தவதி, ரோஜா மகளிர் குழு, கூடப்பாக்கம்

நான் துணி வியாபாரம் செய்து வருகிறேன்.  கொரோனாவால் வீட்டை விட்டு வெளியில் போக முடியாததால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.  புதுத் துணி வாங்க பணம் இல்லாமல் வருத்தமாக இருந்தேன்.  இப்போது இந்தியன் வங்கியின் மகளிர் குழு கடனான 10,000 ரூபாய் உதவியாக உள்ளது.

சித்ரா, சேலியமேடு: ஊரடங்கால் எங்களது வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.  மாவட்ட ஊராட்சி முகமை மூலமாக மகளிர் குழுக்களுக்கு கடன் அளிப்பதாக தெரிந்து இந்தியன் வங்கியை அணுகினேன்.  கடன் கிடைத்தது.  மத்திய அரசுக்கு நன்றி.

கோவிந்தம்மாள், கலைமகள் மகளிர் குழு, சேலியமேடு: 2 மாதமா ஊரடங்கால் வேலை எதுவும் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.  இந்தியன் வங்கில 10,000 ரூபாய் கடனா கொடுத்து இருக்கிறாங்க.  அந்தப் பணத்தை அப்படியே தொழில்ல போட்டு இருக்கேன்.  அரசுக்கும் வங்கிக்கும் நன்றி.

!!!

WhatsApp Image 2020-05-29 at 10.21.52.jpeg

கே.ராஜா, கிளை மேலாளர், இந்தியன் வங்கி, கூடப்பாக்கம்

WhatsApp Image 2020-05-29 at 10.22.23.jpeg

ஹரிகர சுதன் கண்ணன், கிளை மேலாளர், இந்தியன் வங்கி, சேலியமேடு

WhatsApp Image 2020-05-29 at 10.22.48.jpeg

பிரியங்கா, சாய்பாபா மகளிர் குழு, கூடப்பாக்கம்

WhatsApp Image 2020-05-29 at 10.23.15.jpeg

கோவிந்தவதி, ரோஜா மகளிர் குழு, கூடப்பாக்கம்

WhatsApp Image 2020-05-29 at 10.23.36.jpeg

கோவிந்தம்மாள், கலைமகள் மகளிர் குழு, சேலியமேடு

WhatsApp Image 2020-05-29 at 10.23.57.jpeg

சித்ரா, மகளிர் குழு உறுப்பினர், சேலியமேடு

WhatsApp Image 2020-05-29 at 10.25.09.jpeg

ஏ.உதயகுமார்

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

புதுச்சேரி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் காவல்துறைக்கு சவால் விட்ட  புரட்சி நாயகி பிக்பாஸ் மீரா மிதுன்!

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் காவல்துறைக்கு சவால் விட்ட புரட்சி நாயகி பிக்பாஸ் மீரா மிதுன்!

August 13, 2021
Vanathi Srinivasan

ஒரேநாடு ஒரே தேர்தல் கருணாநிதி ஆதரவு… ஆதாரத்தோடு சட்டசபையில் பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்…

February 14, 2024
சீனாவில்  வரலாறு காணாத வெள்ளம்! 94,000 அணைகள் கட்டிய சீனா மூழ்கும் அபாயம்!

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்! 94,000 அணைகள் கட்டிய சீனா மூழ்கும் அபாயம்!

July 23, 2021
பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

பலாப்பழம் சீசன் வர போகிறது அதன் பயன் என்ன ?

April 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x