ஒலிம்பிக்கில் 3 முறை தங்க பதக்கம் வெல்ல காரணமான ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும்பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு. விளையாட்டு துறைக்கு தொடர்பில்லாத ராஜிவ் காந்தி பெயரில் விளையாட்டு துறையின் உயரிய விருது வழங்கப்பட்டுவந்த மாபெரும் பிழை திருத்தப்பட்டுள்ளது.
மேலும் கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என, நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் பெறப்பட்டன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர் என பிரதமர் மேலும் கூறினார். நமது நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது.
பிரதமர் தனது தொடர் சுட்டுரைகளில் கூறியதாவது;
‘‘ ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் மிகச்சிறப்பான செயல்பாடு நமது ஒட்டு மொத்த தேசத்தின் கற்பனையை கவர்ந்துள்ளது. ஹாக்கி விளையாட்டை நோக்கி புதுமையான ஆர்வம், நாடு முழுவதும் எழுந்துள்ளது. இது எதிர்காலத்துக்கு மிகவும் நேர்மறையான அறிகுறியாக இருக்கிறது.
கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்களை நான் பெற்றுள்ளேன். அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி.அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்! ஜெய்ஹிந்த்! என ட்விட்டரில் பதிந்த்துள்ளார்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னணி விளையாட்டு வீரர்களில், மேஜர் தியான் சந்தும் ஒருவர்.நமது நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு, அவரது பெயர் சூட்டப்படுவது பொருத்தமானது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















