ராஜீவ் காந்தி தேசிய பூங்கா இனி ஒராங் தேசியப் பூங்கா! ராஜிவ் பெயரை நீக்கம் செய்து அசாம் அரசு அதிரடி

‘அசாமின் பழமையான தேசிய பூங்கா ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ராஜீவ் பெயர் நீக்கப்பட்டு ஒராங் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தேசிய பூங்காவின் பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்த தேயிலை பழங்குடி மற்றும் ஆதிவாசி சமூகத்தை சேந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

“ஆதிவாசி மற்றும் தேய்ப் பழங்குடியினரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவை ஒராங் தேசியப் பூங்கா என்று மறுபெயரிட அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்று அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அசாம் தேயிலை பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது, ஏனெனில் ஆரம்பத்தில் இப்பகுதி ஓராங் பழங்குடியினரால் வசித்து வந்தார்கள்.

BSNLலை மோடிஅரசு விற்கப்போகிறதா அதற்க்கு இவர்தான்  காரணம் அண்ணாமலை ANNAMALAI BJP

அந்த பகுதியில் மர்ம காய்ச்சல் பரவியதால் அவர்கள் ஓராங் பழங்குடின மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.

1915 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் அதை விளையாட்டு மைதானமாக அதன் பிறகு இது 1985 இல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது, 1999 இல் இது தேசிய பூங்காவாக மேம்படுத்தப்பட்டது, மேலும் ‘ராஜீவ் காந்தி’ பெயரில் சேர்க்கப்பட்டது.

இந்த பூங்காவில் பெங்கால் புலிகள் அதிக அளவில் உள்ளன. ஏற்கனவே, மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயரை மாற்றிய நிலையில், தற்போது அசாம் அரசு பூங்காவின் பெயரில் இருந்து ராஜீவ் காந்தி பெயரை நீக்கியுள்ளது .

பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. ஆதிவாசி மற்றும் தேயிலை பழங்குடியின சமூகத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டது’’ என அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version