ரூ.25 கோடியை மோசடி! சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் உட்பட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது!

சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பத்தூரில் உள்ள வெள்ளலூர் சி.எஸ்.ஐ. ஐக்கிய தேவாலயத்தின் பாதிரியாரக இருப்பவர் செர்சோம் ஜேக்கப். இவர்கோயம்பத்தூர் மாவட்ட மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில் கோவை சி.எஸ். ஐ.திருமண்டலத்துக்கு சொந்தமான 125 ஆலயங்களில் பாதிரியார்கள் உள்பட ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.நான் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ. ஆலய நிர்வாகத்தின் கீழ் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன். எனது வருங்கால வைப்பு தொகை கட்டணத்தை முறையாக சி.எஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வந்தேன். எனது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சி.எஸ்.ஐ நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அதன் பொருளாளர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். அப்போது எனது கணக்கில் தொகை செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் இது வரை எனது கணக்கில் தொகை செலுத்தாமல் சி.எஸ்.ஐ. நிர்வாகம் மோசடி செய்துள்ளது. நான் கேட்டபின்புதான் 2019-ம் ஆண்டு புதிய கணக்கை தொடங்கி ரூ.45 ஆயிரம் மட்டும் செலுத்தியுள்ளனர்.

இதுபோன்று 125 ஆலயங்களிலும் இருந்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை ரூ.25 கோடி அளவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.

இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக முன்னாள் பிஷப், மற்றும் தற்போதைய பிஷப் திமோத்தி ரவீந்தர் பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிஷப் மீது வழக்குப்பதிவு

இந்த புகாரை தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்ட காவல் ஆணையாளர் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிஷப் திமோத்தி ரவீந்தர், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ். பொருளாளர் செல்வகுமார் ஆகிய 4 பேர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது நல்லவரையும் தேடி வருகின்றது காவல்துறை

சி.எஸ்.ஐ.பங்கு ஆலயங்களில் நடைபெற்ற இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version