கேரள மாநிலம் பாலக்காடு, மேலமூரியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் அங்குள்ள கடை முன்பு வெட்டி கொல்லப்பட்டார். பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகி சுபைர் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. .
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகி யாக்யா தங்கலை கைது செய்தனர். இவர் ஏற்கனவே இன்னொரு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்தார். அவரை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















