கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள ஜி அரியூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோட்டு பேனாக்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தகடி ஏழுமலை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ் ,மகளிர் அணி நிர்வாகி தேவி பாலமுருகன் மற்றும் சிதம்பரநாதன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.















