அஸ்ஸாமில் நேற்று இரு வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த 246 பேர் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு மற்றும் திவா லிபரேஷன் ஆர்மி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 277 துப்பாக்கிகள், 720 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பாரக் பள்ளத்தாக்கில் இரண்டு புரூ-ரியாங் குழுக்கள் வரும் நாட்களில் சரணடையும் என்று பேசிய அவர், இதற்கான நடவடிக்கையை முடித்து பிப்ரவரிக்குள் தீர்வு காண முயற்சிப்போம் என ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















