பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்று காரணமாக சென்னை அண்ணா ஆர்ச் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மிகவும் கவலைக்கிடம் என தெரிவித்த மருத்துவமனை அதற்கடுத்து பாடகர் எஸ்பிபி உடல்நிலை முன்னேறி வருவதாக கூறியது.
எஸ்பிபி உடல்நிலை மீண்டு வர வேண்டும் என திரைத்துறை சார்பில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த பிராத்தனையில் அவரது ரசிகர்களும் கலந்து கொண்டு பாடகர் எஸ்பிபி மீண்டு வர பிரார்த்தித்தனர்.
கடந்த சிலநாட்களாக அவரின் உடல் நிலை சீராக உள்ளது என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதன் செய்தியை கேட்டு அவரின் ரசிகர்கள் கடவுளுக்கு நன்றிகள் தெரிவித்து வரும் நிலையில் அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சரண் அவர்கள்.
அவர் கூறியுள்ளதாவது : நேற்று மதியம் மருத்துவமனைக்கு சென்றேன். என்னிடம் ஏதோ சொல்ல, எழுதிக் காட்ட நினைத்தார். ஆனால், அவரால் பேனாவை சரியாகப் பிடிக்க முடியவில்லை.இருப்பினும், இந்த வாரத்தில் பேனாவை பிடித்து எழுதிக் காட்டுவார் என நம்புகிறேன். அவர் இசை கேட்கிறார்; விரல்களை அசைக்கிறார். பாட முயல்கிறார். இவை அனைத்தும், அப்பா மீண்டு வருவதற்கான நல் அறிகுறிகள்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி திரைவட்டாரங்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்க கூடிய எஸ்பிபி யின் ரசிர்கர்களுக்கு சற்று சந்தோசத்தை அளித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















