தமிழகத்திலிருந்து சில மாதகாலமாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட பிரம்மாண்டமான 300 டன் எடைகொண்ட பெருமாள் சிலை கர்நாடகா மாநிலம் பெங்களூரு டவுன் பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது

இந்த பெருமாள் சிலையானது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் உள்ள பக்தர்களுக்கெல்லாம் தரிசனம் தந்த பெருமாள் இப்போது பெங்களுருவில் கால்பதித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகிலுள்ள தெள்ளார் செட்டி குளத்திலிருந்து பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலையானது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகர் ஈஜிபுரா பிடிஎம் கான்ஸ்டென்சில் எனும் பகுதியில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு அதற்கான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














