Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!

Oredesam by Oredesam
July 24, 2021
in இந்தியா, செய்திகள்
0
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!
FacebookTwitterWhatsappTelegram

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மேக் இன் இந்தியா திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்காகவும், சிறந்த உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காகவும், இந்தியாவை உற்பத்தி மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டம் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் 27 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதலீட்டு வசதிகளை செய்யும் நடவடிக்கையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநில அரசுகளும் இதற்கான உதவிகளை செய்கின்றன. முதலீட்டை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சிகள், உச்சிமாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியா கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 81.72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அன்னிய நேரடி முதலீடை பதிவு செய்துள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்:
தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மத்திய அரசின் முன்னணி திட்டமாகும். வலுவான பொருளாதார சூழலை உருவாக்கவும், புத்தாக்கத்தை வளர்ப்பதும் தான் இதன் நோக்கம். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் நிலையான பொருளாதார வளர்ச்சியையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் சிறப்பம்சங்கள் இணைப்பு 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கை, தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டில் 4504, 2019-ல் 8213, 2020ம் ஆண்டில் 8628, 2021ம் ஆண்டில் 4982, என மொத்தம் 26,327 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ( DPIIT) தெரிவித்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்:
ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 1096 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவைகள் கடந்த 3 ஆண்டுகளில் செய்த ஏற்றுமதியின் மொத்த மதிப்பு ரூ.69, 415 கோடி.

கொவிட்-19 தொற்று, கம்பெனிகள் இணைப்பு, வியாபார மந்த நிலை, சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 336 நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து வெளியேறியுள்ளன.

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு:
2020-21ம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 2019-20ம் ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 17.37 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-20ம் ஆண்டு மற்றும் 2020-21ம் ஆண்டின் வேளாண் ஏற்றுமதியில் சரக்கு வாரியான விவரங்கள் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளன. 2019-20ம் ஆண்டில் 35157.55 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், 2020-21ம் நிதியாண்டில் 41265.80 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள்:
தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், பொருட்களின் தரநிலையை மேம்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு தனது அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் 156 தயாரிப்புகளுக்கு, இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஸ்) சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்கியது. உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளிக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 13 துறைகளில், ரூ1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை பல அமைப்புகளுடன் இணைந்து உத்யோக் மந்தன் என்ற பெயரில் 2 மாத காலத்துக்கு தொடர் இணைய கருத்தரங்குகளை நடத்தியது. இதில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் தரம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர உள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என்ற பிரசாரத்தையும் மத்திய அரசு மேற்கொண்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

November 3, 2024

எகிறிக்கொண்டே செல்லும் திமுகவினரின் கிரைம் ரேட்!

November 21, 2020
1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

March 26, 2020
கிளம்பாக்கம்

திணறிய கிளாம்பாக்கம்.. ரோட்டில் இறங்கிய மக்கள்… ஸ்டாலின் அரசை கிழித்து தொங்கவிட்ட சம்பவம்!

June 6, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x