சுஷாந்த் மரனம் ரியா சக்ரபர்த்தி கைது! போதை பொருள் கொடுத்து கொல்லப்பட்டாரா சுஷாந்த்!புதிய தகவல்

பாலிவுட், திரையுலகம், கேரள திரையுலகம் எல்லாம் போதை பொருட்களை அதிகமாக பயன்படுதுவர்கள் என தகவல் வெளிவந்துள்ளது. சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. இதனால் பாலிவுட் திரையுலகம் நடுங்கி போய் உள்ளதாம். பாலிவுட்டை பொறுத்தவரையில் ஒரு போதை வஸ்து பழக்கம் சாதாரணம்” என்றே ஊடகங்கள் சொல்கிறார்கள். ரியா சக்ரபர்த்தியையும் இந்த போதை வஸ்து விவகாரத்தில் தான் கைது செய்திருக்கிறார்கள்.

ரியா சக்ரபர்த்தியிடமிருந்து எந்த போதை பொருட்களையும் கைப்பற்றவில்லை நார்க்கோட்டிக்ஸ் பியூரோ. ஆனாலும், ரியாவின் வாட்சாப் சாட், போதை பொருளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் கொடுத்தது, போதை பொருட்களை விற்றவர்களது வாக்குமூலம் போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது.
சரி… இந்த போதை வஸ்து என்ன என்பதை பலரும் தெளிவாக குறிப்பிடுவதில்லை. அந்த போதை வஸ்து: கஞ்சா (cannabis). அதை வைத்திருக்கும் அளவைப் பொறுத்து (கிராம் கணக்கை பொறுத்து) சிறை தண்டனை. ரியா வாக்குமூலத்தில் 59 கிராம் கஞ்சா என்று சொன்னதாக தெரிகிறது. இதற்கெல்லாம் ஒரு வருடம் தான் தண்டனையாம். பெரிய அளவில் வைத்திருந்தால் 10 வருடம். அதிக பட்சம் 20 வருடம்.

மேலும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வளராமல் தடுப்பதற்காகவே இந்த போதை பழக்கத்தை வளரும் நடிகர்களுக்கு ஏற்படுத்திவிடுவார்களாம். இதறகு காரணம் பாலிவுட் கான்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதே போல் பல மாஃபியா கும்பல்கள்களிடம் பாலிவுட் இருந்து வருகிறது. சுஷாந்த் மரணமும் இதே பாணியில் தான் நடந்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரது காதலி என்று கூறபடுகிறது.

சுஷாந் இறப்பதற்கு 5 நாட்கள் முன்புதான் அவரது மானேஜர் திஷா சாலியன் மாலாட் கட்டிடத்தின் 14 வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். எம்.ஜி.ஆர் நடித்த ரகசிய போலிஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரை காதலிப்பது போல் நடித்து அவரை வீழ்த்த வில்லன்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவை ஏற்பாடு செய்வார்கள். அதேபோல்தான் இந்த மாஃபியா கும்பல் ரியாவை சுஷாந்தை காதலிப்பதைப்போல் போதை மருந்தை அவருக்கு செலுத்த செய்திருக்கிறார்கள். இதை எப்படியோ அறிந்த திஷா சாலியன் சுஷாந்தை ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்ல, சுஷாந்த் மீடியாவிற்கு செல்வேன் என்று தன்னைக்காதலித்த ரியா மீது கோபபட, இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சுஷாந்த் மரணம் திட்டமிடப்பட்டது தான் என கூறி கொலை வழக்காக மாறியுள்ளது,

Exit mobile version