தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும் நிஜாமுதீன் மார்க்காஸ் ஒரு கொரோனா கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தப்லிக் ஜமாத்தினார்களின் சுகாதாரப் பணியாளர்களிடமும், மருத்துவர்கள், காவல்துறையினர் மீது கல் வீசுவது மற்றும் உமிழ்வது நிர்வாகத்தினரிடமும் மோசமாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்தேறியது.

இந்த நிலையில் கொரோனாவினால் இந்தியாவில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் மீது கொலை செய்யும் நோக்கமில்லாமல் செய்யப்பட்ட கொலை (culpable homicide) என்ற பிரிவில் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் சாத் மற்றும் பிற தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்துடன் சம்பந்தப்பட்டது என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தாஹிர் உசேன் மற்றும் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபைசல் பாரூக்கி ஆகியோருடன் மெளலானா சாதுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஃபைசல் பாரூக்கி டெல்லி ராஜ்தானி பள்ளியின் உரிமையாளர் ஆவார்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தீவிர விசாரணையில் தாஹிர் உசேன் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். இந்த நடவடிக்கையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது . இதில் தப்லீக் ஜமாத் தலைவர் மௌலானா சாத், ஆம் ஆத் மி கட்சியின் தாஹிர் மற்றும் பயங்கரவாதி பாரூக்கி ஆகிய மூவரும் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி கலவரத்தின் மூளையாக செயல்பட்ட ஃபைசல் பாரூக்கியின் ஆடம்பரமான ராஜதானி பள்ளியில் மெளலானா சாத் முதலீடு செய்துள்ளது அமலாக்க இயக்குநரகரத்தின் (ED) விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தவிர, தப்லிக் ஜமாத் தலைவர் சாத் தன்னிடம் இருந்த கறுப்புப் பணத்தை ஃபாரூகிக்கு சொந்தமான மற்றொரு பள்ளியிலும் முதலீடு செய்திருப்பதும் அம்பலமானது.

அலிம் தப்லிக் ஜாமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்கும் வேலையையும் மேற்கொண்டார். டெல்லி கலவரத்தின்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் விவரங்கள் சேமிக்கப்பட்டது. அந்தத் தரவுகளில் இருந்து அலீம் மற்றும் பைசல் பாரூக்கி ஆகியோருக்கு இடையில் தொடர்ந்து பலமுறை உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் மெளலானா சாதுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது அலீம் மற்றும் மெளலானா சாதின் மூன்று மகன்கள் உட்பட மார்க்கஸுடன் தொடர்புடைய பலரிடமும் அமலாக்கதுறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும் கலவரத்திற்கு ஜாமத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளார்கள் காவல்துறை.

Exit mobile version