Tag: TAMIL NEWS OreDesam NEWS

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தடுப்பூசிகளுக்கு அனுமதிஅளிக்கப் பட்டதற்காக, நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.

இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளதை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில்,  ஒரு தீர்க்கமான திருப்புமுனை என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தொடர் டிவிட்டுகளில், பிரதமர் கூறியதாவது: ‘‘தீவிர போராட்டத்தை வலுப்படுத்த,  ஒரு தீர்க்கமான திருப்புமுனை! நாட்டில் கோவிட் இல்லாத ஆரோக்கியமான சூழலை விரைவுபடுத்த, @SerumInstIndia மற்றும்@BharatBiotech ஆகியவற்றின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகள் மற்றும் புத்தாக்க படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கோவிட் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்யும். இது, தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றும், நமது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் அக்கறை மற்றும் கருணை உள்ளது.’’ ‘‘நெருக்கடியான  நேரத்திலும், சிறப்பான பணியை செய்ததற்காக, மருத்துவர்கள்,  மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள்,  துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கொரோனா  முன்கள பணியாளர்கள் அனைவருக்கும், நமது நன்றியை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாம் அவர்களுக்கு எப்போதும், நன்றியுள்ளவர்களாக இருப்போம்.’’

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமைழைக்கு வாய்ப்பு.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஜனவரி 5, 6ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாகிஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் புயல்  மேலடுக்கு  சுழற்சி காணப்படுகிறது. இதோடு வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில், வடக்கு பஞ்சாப்பில் இருந்து வடகிழக்கு அரபிக் கடல் வரை காற்று சங்கமும் இன்று காணப்பட்டது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் ஜனவரி 5ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் தீவிர மழை பெய்யும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் 3 மற்றும் 4ம் தேதிகளிலும், ஜம்மு காஷ்மீர், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஜனவரி 5, 6ம் தேதிகளில், இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னையில் ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல்.

துபாயில் இருந்து ஏர் இந்தியா IX644 விமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜஹபர் அலி அப்துல் வகாப் (49) மற்றும் சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28) ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 733 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் அவர்களது உள்ளாடையினுள் மறைத்து தைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமிருந்தும் ரூ.31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார். கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் ...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

2021 இந்திய குடியரசு தினத்தில் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ?

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்கிறார். 2021 ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முகாமிடும் அமித்ஷா.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் ...

இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை ...

தரமான சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போனில் பேசிய வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா ..

"யாரு ராஜேந்திர பாலாஜியா? ஆமா, தம்பி யாரு? அய்யா உங்க பேட்டி பார்த்தோம் ரொம்ப சந்தோஷம், உண்மைதானப்பா பேசுறோம் ஆமாங்க, திமுக ஒரு உருப்படாத கட்சி, தேசவிரோத ...

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விஷேச அதிகாரமான ஆர்ட்டிக்கிள் 370ரத்து செய்யப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு நடைபெற இருக்கும் முதல் பொலிடிக்கல் ...

மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், ஞாலம் ஊராட்சி, அந்தரபுரம் ஊரைச் சார்ந்தவர் பூதலிங்கம்பிள்ளை (வயது 45), திமுக தெரிசனங்கோப்பு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தீபாவளி அன்று இவரும், ...

Page 151 of 159 1 150 151 152 159

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x