தமிழக அரசியல் அட்டராசிட்டிகள்..

தெனாலிராமன்-பீர்பால் , ஊறுகாய் அம்மையார், 2 ரூ சங்கி ….திட்டுவதாக நினைத்து கூறப்படும் இவ்வார்த்தைகள் அனைத்தும் ஆகப்பெரும் பாராட்டுகள் என்று கூட புரியாமல்… தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது..பெரும் வேடிக்கை. 🙂

தெனாலிராமன், பீர்பால் போன்றவர் என்று ஒருவரை ஒப்பிட்டு சொன்னால்….அது அந்த நபரை பாராட்டுவதாகும்.

சுவை மாறுபடாமல், வருடத்திற்கும் கெடாமல் …”பண்டைய முறையில்” தயாரிக்கப்படும் பாரம்பரிய ஊறுகாய் என்பது மிக சவாலான தயாரிப்பு. அறிவியலும், கணக்கும், துல்லியமும், தூய்மையும், கூர்மையும் தேவைப்படுகிற செயல்பாடு ! எனவே … ஊறுகாய் அம்மையார் என்று குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் …அது…அவருக்கு கிடைக்கும் பாராட்டு.

2 ரூபாய்க்கு வீணாய்ப்போன சாக்லேட் கூட கிடைக்காத எதார்த்த நிலையில் ….

இரண்டு ரூ -க்கு ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று சொல்வதே… அவர்களை தன்னலமற்றவர்கள் என்று கூறுகிற பாராட்டு.

கட்டுரை :- பதிவு பானு கோமஸ்.

Exit mobile version