Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

Oredesam by Oredesam
December 20, 2020
in இந்தியா, செய்திகள்
0
தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.
FacebookTwitterWhatsappTelegram

அசோசெம் நிறுவன வாரம் 2020 நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். `நூற்றாண்டின் அசோசெம் தொழில்முனைவோர் விருதை’ திரு. ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் அளித்தார். டாடா குழுமம் சார்பாக இந்த விருதை திரு. ரத்தன் டாட்டா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசத்தைக் கட்டமைப்பு செய்வதில் தொழில்துறையினரின் பங்களிப்புக்காகப் பாராட்டு தெரிவித்தார். இப்போது விண்ணைத் தொடும் அளவுக்கு தொழில்துறையினருக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று கூறிய அவர், இந்த வாய்ப்பை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வரக்கூடிய ஆண்டுகளில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க உங்களின் முழு சக்தியையும் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இப்போது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்முனைவோர் மற்றும் சொத்து உருவாக்குநர்கள் நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். செயல்திறன் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளை உருவாக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கும், இளம் திறமையாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் அளித்தல், உலக அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை வேகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் இலாபத்தைப் பகிர்தல் போன்ற சீர்திருத்தங்களை தொழில்துறையில் உருவாக்கி, இதன் பயன்கள் கடைசி நிலையில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

பெருந்தொற்று காலத்திலும், உலகம் முழுக்க முதலீட்டுக்குப் பிரச்சினைகள் இருந்த நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது தொழில்துறையினர் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக நேரடி அந்நிய முதலீடு மற்றும் பி.எப்.ஐ. மூலம் சாதனை அளவாக அதிகபட்ச முதலீடுகள் வந்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது நம்பிக்கை அதிகரித்திருப்பதைப் போல, உள்நாட்டு முதலீடுகளையும் தொழில்துறையினர் அதிகரிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அமெரிக்காவில் 70 சதவீத முதலீடு செய்யப்படும் நிலையில், இந்தியாவில் இதற்கான முதலீடு குறைவாக உள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்தார். வேளாண்மை, பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, கட்டுமானம், மருந்துகள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியத் தொழில் துறையினர் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு துறையிலும், எல்லா நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

உலகம் நான்காவது தொழில்புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பம் என்ற ரூபத்தில் சவால்கள் வரும், அதற்கான தீர்வுகளும் வரும் என்று பிரதமர் கூறினார். திட்டமிடுதல் மற்றும் செயல்படுதலுக்கு  இதுதான் சரியான தருணம் என்றார் அவர். தொழில்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று கூடி, தேசத்தைக் கட்டமைக்கும் பெரிய இலக்கை நோக்கிய பயணத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியா சுதந்திரம் பெற்று நூறாண்டை எட்டுவதற்கு இன்னும் உள்ள 27 ஆண்டுகள், உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பை நிர்ணயிப்பதாக மட்டுமின்றி, இந்தியர்களின் கனவு மற்றும் அர்ப்பணிப்பைப் பரிசோதிப்பதாகவும் இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியத் தொழில்துறையின் திறன், உறுதி மற்றும் தைரியத்தை உலகிற்குக் காட்ட வேண்டிய காலமாக இது உள்ளது என்று அவர் கூறினார். தற்சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பது மட்டுமின்றி, எவ்வளவு சீக்கிரமாக இதை எட்டுகிறோம் என்பதும் முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்பு குறித்து முன்பு இந்த அளவுக்கு ஆக்கபூர்வமான நம்பிக்கை ஒருபோதும் இருந்தது கிடையாது என்றும் அவர் கூறினார். முன் எப்போதும் இல்லாத இந்த அளவுக்கான நம்பிக்கை ஏற்படுவதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்றார் அவர். புதிய சக்தியுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு, புதிய வாய்ப்புகளை இப்போது இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையினரின்  முதலீட்டில் `இந்தியாவில் எதற்காக’ என்றிருந்த மனநிலை இப்போது `இந்தியாவில் ஏன் செய்யக் கூடாது’ என்ற வகையில் மாறிவிட்டது என்றார் அவர்.

தன்னுடைய பலம், ஆதார வளங்களின் மீது நம்பிக்கை கொண்டு, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது, இந்த இலக்கை எட்டுவதற்கு உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்து சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் வசதியை உலக அளவிலானதாக ஆக்குவதற்கு இலட்சிய நோக்கில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், பூகோள ரீதியிலான அரசியல் மாறுபாடுகளுக்கும் நாம் எதிர்வினை ஆற்ற வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். உலக அளவிலான வழங்கல் தொடரில் திடீரென எழக்கூடிய எந்தத் தேவையையும் இந்தியா எப்படிப் பூர்த்தி செய்யும் என்பதற்காக செயல்திறன் மிக்க ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். இலக்கை அடைவதற்கு, அசோசெம் போன்ற தொழில் அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சகம், வணிகம் மற்றும்  வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். உலக அளவில் நிலைமாற்றங்கள் ஏற்படும் போது நாம் எப்படி விரைவாகச் செயல்பட வேண்டும், வேகமான செயல்பாட்டுக்கு நமது நடைமுறைகளை எப்படி ஆயத்தப்படுத்த வேண்டும் என்பது குறித்து தொழில்துறையினர் ஆலோசனைகள் கூற வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன், உலக நாடுகளுக்கும் உதவக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது. கொரோனா காலத்திலும், உலக நாடுகளின் மருந்துத் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளை மற்ற நாடுகளுக்கு அளித்துள்ளது. தடுப்பு மருந்துகள் விஷயத்திலும், பல நாடுகளின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்யும் என்று பிரதமர் கூறினார்.  கிராமப்புறக் கைவினைஞர்களின் பொருள்களைக் காட்சிப்படுத்த உலக அளவிலான ஒரு களத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று அசோசெம் உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். இதனால் கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி அகற்றப்படும் என்றார் அவர். நம்முடைய இயற்கை விவசாய விளை பொருள்கள், நல்ல கட்டமைப்பு வசதிகள், நல்ல சந்தை வசதிகளை ஊக்குவிப்பதற்கு, மாநில அரசுகள், வேளாண் அமைப்புகள் மற்றும் தொழில்துறை சங்கங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் நமது கிராமப்புறப் பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் அவர் கூறினார்.

21வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நெடுஞ்சாலைகள் மூலம் இந்தியாவில் தொடர்பை ஏற்படுத்துவதை அடல் ஜி நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர் நினைவு கூர்ந்தார். இன்றைக்கு நாட்டில் இயல்புக் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் வசதிகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எல்லா கிராமங்களுக்கும் அகன்ற அலைக்கற்றை இணைய இணைப்பு வசதி அளிக்கும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். கிராமப்புற விவசாயிகள் மின்னணு வசதி மூலம் உலகச் சந்தைகளை நாடும் வசதி இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் கூறினார். நல்ல கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான நிதிக்கு அனைத்து வாய்ப்புகளையும், அதாவது பொதுத்துறை வங்கிகளைப் பலப்படுத்துதல், பங்குப் பத்திரச் சந்தைகளின் திறனை அதிகரித்தல் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதே போல, இறையாண்மை சொத்து நிதிகள், ஓய்வூதிய நிதிகளுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. REIT-கள் மற்றும் INVIT-களுக்கு ஊக்கம் தரப்படுகிறது. கட்டமைப்பு தொடர்பான சொத்துக்களுக்கு பணம் தரப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தேவையான வசதிகளை அரசு அளிக்கும், சரியான சூழலை உருவாக்கித் தரும், ஊக்கத் தொகைகள் வழங்கும், கொள்கைகளை மாற்றி அமைக்கும். ஆனால் தொழில்துறைப் பங்காளர்கள் தான் இதைப் பயன்படுத்தி வெற்றியை ஈட்டித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்சார்பு இ்தியா என்ற கனவு நிறைவேற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது, அதில் நாடு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

திருப்பூரில் குண்டு வெடிப்பு உயர் மட்ட விசாரணை தேவை ஹிந்து முன்னணி அறிக்கை.

October 9, 2024
தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர்  4 பேருக்கு கொரோனா உறுதி!    எண்ணிக்கை  26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனவை பரப்பிய முகமது மோசிம் மீது தமிழக காவல்துறை வழக்கு!

June 12, 2020
திமுக ஆட்சியில் சீரழியும் சிறுவர்கள்-டாக்டர் ராமதாஸ்.

கடலூர் எம்.பியை கைது செய்ய சிறிதும் தாமதிக்ககூடாது இல்லையென்றால் வேறுமாதிரி நடக்கும் என ராமதாஸ் திமுகவுக்கு எச்சரிக்கை !

October 10, 2021
பழி தீர்க்க நேரம் வந்துவிட்டது  டிராகன் சீனாவை அழிக்க பிரதமர் மோடி மாஸ்டர் பிளான்

பழி தீர்க்க நேரம் வந்துவிட்டது டிராகன் சீனாவை அழிக்க பிரதமர் மோடி மாஸ்டர் பிளான்

June 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x