தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தைப் பொருத்தவரை தற்போது 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவை பொறுத்தவரை 67 மேற் குணமனடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன் கடந்த செவ்வாய்க்கிழமை கொ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்னிக்கை 29 ஆக இருந்தது இந்த நிலையில், மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொ கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இதில், மதுரையில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்த நபரின் மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தோனீசியாவில் இருந்து வந்த இஸ்லாமிய மத குருக்கள் சென்று வந்த இடங்களில் சுகாதார துறை தீவீர சோதனை செய்து வருகிறது. இவர்களால் தான் தமிழம் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளது. சென்றார்கள் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் எத்தனை மசூதிகளில் தொழுகை செய்தனர் என தமிழக அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version