Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நாட்டையே திரும்ப வைத்த மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு! பெருமை பேசிய இண்டி கூட்டணிக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு! 75 வருஷமா ஏன் எடுக்கல?

Oredesam by Oredesam
May 1, 2025
in இந்தியா, செய்திகள்
0
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
FacebookTwitterWhatsappTelegram

‘நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இது நடத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல மத்திய அமைச்சரவை குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வரிசையில், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது.இதன் முடிவில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத அறிவிப்பு வெளியானது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

கூட்டத்திற்கு பின், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தொடர்ந்து பேசி வரும் காங்கிரஸ், அது ஆட்சியில் இருந்தபோது, இதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. உண்மையில், அந்தக் கட்சி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானது.ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை, தன் அரசியலுக்கான ஒரு ஆயுதமாகவே காங்கிரஸ் அரசு பயன்படுத்தி வந்துள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2010ல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, லோக்சபாவில் தெரிவித்தார். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனாலும், கண் துடைப்பு நடவடிக்கையாக, ‘காஸ்ட் சென்சஸ்’ எனப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், ‘காஸ்ட் சர்வே’ எனப்படும் மாதிரி கணக்கெடுப்பை நடத்தினர்.இதில் இருந்து, காங்கிரசும், அது இடம்பெற்றுள்ள ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை வெறும் அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தின என்பது தெளிவாக தெரியும்.

கடைசியாக, 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பின், அடுத்து நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.மக்களிடம் இருந்து இந்தத் தகவல்கள், மிகவும் வெளிப்படையாகவும், திட்டமிட்ட நடைமுறைகளின்படியும் பெறப்பட்டு தொகுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாகவும், திறந்த மனதுடனும் நடத்தப்படும். சிறப்பான கொள்கை திட்டமிடலுக்கு இது மிகவும் உதவும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பட்டியலில் உள்ளன. அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதாக, சில மாநிலங்கள் கூறுவது தவறாகும். அது மாதிரி கணக்கெடுப்புதான்.மேலும், அது அரசியல் நோக்கத்துக்காக நடத்தப்பட்டவை. அந்தத் தகவல்களில் உண்மை தன்மை, வெளிப்படைதன்மை இல்லை. அவை மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும், கேள்வியையும், நம்பிக்கையின்மையுயம் ஏற்படுத்தியுள்ளன.

இவற்றை மனதில் வைத்தே, சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை முன்வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, பல மாநிலங்களில் உள்ள கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீஹார், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

கடைசியாக நம் நாட்டில், 2011ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், 2020ல் கொரோனா பரவலைத் தொடர்ந்து அது ஒத்திவைக்கப்பட்டது.நிருபர்களை சந்தித்து அமைச்சரவை குழு கூட்டத்தின் முடிவுகளை தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

தலைவர்கள் வரவேற்பு
முதல்வர் ஸ்டாலின்: ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும், எப்போது நிறைவடையும் என்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை. பீஹார் தேர்தலை கருதி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும், இது சிறப்பான வெற்றி. ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, முதன் முதலாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழகம் தான். என ஸ்டிக்கர் ஒட்டிய திமுக கிட்டதட்ட மத்திய அமைச்சரவையில் 15 ஆண்டுகளாக இருந்தது ஆனால் இது குறித்து வாயை திறக்கவில்லை. மேலும் பீகார்,கர்நாடக அரசு போன்று மாதிரி கணக்கெடுப்புகூட எடுக்கவில்லை எப்போதும் போல் இந்த விஷயத்திலும் முழு பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைத்துள்ளார்.ஸ்டாலின் இது முதல்வ ஸ்டாலினுக்கு வெக்கமாக இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதை தி.மு.க., அரசு கைவிட்டு விட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, 1998 முதல் பா.ம.க., குரல் கொடுத்து வருகிறது. இது, பா.ம.க.,வின் 30 ஆண்டு கால முயற்சிக்கு கிடைத்த பலன்.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின், வாழ்க்கைத்தரம் உயரும். ஒட்டு மொத்த மக்கள் தொகையை கணக்கிடுவதும், மக்களின் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குடியரசு தலைவராக எடியூரப்பா! கர்நாடக முதல்வராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் ?

குடியரசு தலைவராக எடியூரப்பா! கர்நாடக முதல்வராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் ?

July 27, 2021
Jaffer Sadiq

ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி கைது.. சத்து மாவு பாக்கெட்டில் போதை பொருள் கடத்தல்.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்…

March 13, 2024

Facebook-யை BJP கட்டுப்படுத்துகிறது என்ற ராகுலின் கருத்துக்கு ரவிசங்கர் பிரசாத் கண்டனம்!

August 17, 2020
துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?

துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?

April 28, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x