Thursday, January 29, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.

Oredesam by Oredesam
November 4, 2024
in செய்திகள்
0
சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.
FacebookTwitterWhatsappTelegram

சென்னைத் துறைமுக ஆணையம்,காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து,நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று சென்னை வந்தார்.ரூ.187.33 கோடி முதலீட்டிலான ஒருங்கிணைந்த இந்தத் திட்டங்கள் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்,வர்த்தக நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும், இந்தியாவின் பசுமை துறைமுக முயற்சிகளை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளன.

துறைமுகங்களை நவீனமயமாக்குவதிலும் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவதிலும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை தமது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர்,உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவை முக்கியமான நாடாக நிலைநிறுத்துவதில் இந்தத் திட்டங்களின் பங்கினை அவர் வலியுறுத்தினார்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

சென்னை துறைமுகத்தில் ரூ.73.91 கோடி திட்ட செலவில் நான்கு புதிய ஏற்றுமதி-இறக்குமதி கிடங்குகள் கட்டுவது உட்பட சீரிய பலன்கள் தரும் பல்வேறு திட்டங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். 18,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கிடங்குகள், பிரத்யேகமான, சுத்தமான, மூடப்பட்ட வகையிலான சேமிப்பு முறைகள் தேவைப்படும் விவசாய பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட முக்கிய சரக்குகளுக்கு அத்தியாவசிய சேவையை வழங்கும்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்படும் இந்த திட்டம், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக முக்கிய துறைமுகங்களில் தனது வர்த்தக திறனை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் இலக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. கிடங்குகள் தவிர, புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் கடற்கரை சாலையையும் அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 350 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. ரூ.4 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இச்சாலை, சென்னை துறைமுகத்தில் உள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்திற்கு கனரக சரக்குகளையும் சரக்குப் பெட்டகங்களையும் எளிதாக எடுத்துச் செல்ல உதவுகிறது. புதிய சாலையானது அணுகலை மேம்படுத்துகிறது,

தூசு மாசுபாட்டைக் குறைக்கிறது, சுற்றுச்சூழல் இணக்கத்தை ஊக்குவிக்கிறது. துறைமுக உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் இது குறிக்கிறது.

திறமையான போக்குவரத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், ரூ.88.91 கோடி மொத்த முதலீட்டில் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் தெற்கு ரயில்வே இணைப்பை இரட்டை ரயில்பாதையாக மாற்றும் திட்டத்தை திரு சோனாவால் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக தேவைகளுக்கு ஏற்ப இந்த விரிவாக்கம் 2.65 கி.மீ ரயில் பாதையை கூடுதலாக்குகிறது.

இதில் கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் மீது மூன்று புதிய ரயில் பாலங்கள் கட்டப்படுவதும், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை இண்டர்லாக்டு கிராசிங்குகளாக மாற்றுவதும் உள்ளடங்கும்.

இந்த திட்டம் துறைமுகத்தின் ரயில் கையாளுதல் திறனை நாளொன்றுக்கு 22 முதல் 44 ரேக்குகளாக அதிகரிக்கும். இது துறைமுகத்திற்குள் வேகமான, பாதுகாப்பான சரக்கு இயக்கத்தை அனுமதிக்கும். காமராஜர் துறைமுக நிறுவனத்தில் ரூ.20.51 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கப்பல்களுக்கான கரையோர மின்சார வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பசுமை துறைமுக வழிகாட்டுதல்களுடன் இணைந்து, இந்த வசதி சரக்குப் பெட்டகத் தளம் 1, சரக்குப் பெட்டகத் தளம் 2 பெர்த்களில் கரையோர சக்தியை வழங்குகிறது. கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது மற்றும் டீசல் என்ஜின்களை சார்ந்திராமல் கப்பல்களை இயக்க அனுமதிக்கிறது. இதனால் தூய்மையான, மிகவும் சிக்கனமான செயல்பாட்டு சூழலுக்கு உதவுகிறது.

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் இந்தத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சியில் திரு சோனாவால் எடுத்துரைத்தார்.

“இந்தத் திட்டங்கள் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கும், நிலைத்தன்மையில் எங்கள் அசைக்க முடியாத அக்கறைக்கும் ஒரு சான்றாகும். தடையற்ற செயல்பாடுகளுக்கும் பசுமை நடைமுறைகளுக்கும் அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம்.

உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்ற நமது துறைமுகங்களை தயார்படுத்துகிறோம். அதே நேரத்தில் அவை சுற்றுச்சூழல் இலக்குகளுடன் ஒத்துப்போவதையும் உறுதி செய்கிறோம் “என்று அவர் கூறினார்.

சர்வதேச துறைமுகங்கள், கப்பல் நிறுத்துமிடங்கள் சங்கத்தின் நிலைத்தன்மை விருது அறிக்கையை அமைச்சருக்கு வழங்குதல், 2022-23 ஆம் ஆண்டிற்கான காமராஜர் துறைமுக நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்புக்கான பாராட்டு ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சமூக பாரம்பரியத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், ஐந்து உறுதிமொழி முன்முயற்சியின் கீழ் ‘கிளைவ் பேட்டரி குடியிருப்புகள்’ என்பதை ‘ராமானுஜன் குடியிருப்புகள்’ என்று மறுபெயரிடுவதையும் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தத் திட்டங்கள் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், எதிர்காலத்திற்குத் தயாரான, நீடித்த துறைமுக சூழல் அமைப்புக்கான அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் இந்தியாவை ஒரு முன்னணி கடல்சார் மையமாகவும், உலகளாவிய வர்த்தகத்தை செயல்படுத்துவதாகவும் நிலைநிறுத்தும் உள்கட்டமைப்பு, சூழல் முன்முயற்சிகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊடகங்கள் அண்ணாமலை நேரடி IPS சகாயம் எப்படி IAS ஆனார் என்று விவாதம் நடத்துமா ?

August 29, 2020
மத்திய பிரேதேசத்தில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் 17 பேர் மாயம்  20 அமைச்சர்கள் ராஜினாமா ! ஆட்சியை பிடிக்கிறதா பா.ஜ.க

மத்திய பிரேதேசத்தில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் 17 பேர் மாயம் 20 அமைச்சர்கள் ராஜினாமா ! ஆட்சியை பிடிக்கிறதா பா.ஜ.க

March 10, 2020
அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

அமைச்ச சொத்து முடக்கம்: கடமையை செய்தது அமலாக்கத் துறை: வானதி சீனிவாசன்

July 27, 2024
லஞ்சம் கேட்டு தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி.

லஞ்சம் கேட்டு தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி.

June 25, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x