இந்தியாவில், மொத்த தொலைதொடர்பு சந்தாதாரர்கள் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில், 119.92 கோடியாக அதிகரித்துள்ளதாக, ‘டிராய்’ எனும் இந்திய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மொத மக்கள் தொகை 140 கோடி தான் இதில் 120 கோடி தொலைதொடர்பு சந்தாதாரர்களாக உள்ளார்கள். ஒரு பக்கம் மொபைலால் பல்வேறு நலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் தீமைகளும் அதிகரித்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனில் மூழ்கியுள்ளார்கள். குழந்தைகளுக்கு நிலா சோறு கதைகள் சொல்லி உணவு கொடுப்பது என்பது மறைந்து தற்போது மொபைல் பார்த்து கொண்டே தான் உணவு ஊட்டுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல பேர் மொபைல் போனிற்கு அடிமையகா உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் மொபைல் போன் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை தூங்கும் போது தங்கை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நண்டாகான் என்ற நகரின் அருகே கைராகார் சுயூகாதன் காண்டாய் ( கேசிஜி ) என்னும் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அடிக்கடி போனில் ஆண் நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனை இவரது அண்ணன் கண்டித்துள்ளார். மேலும் நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், போன் பயன்பாட்டை நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற சிறுமி அண்ணன் தூங்கி கொண்டிருந்த போது கோடாரியால் கழுத்தின் தொண்டை பகுதியில் ஓங்கி வெட்டினார். அண்ணன் வீட்டுக்குள்ளே இறந்தார் . இதில் சிறுமி அணிந்திருந்த உடைகள் ரத்தத்தில் நனைந்தன. இதனை துடைத்து விட்டு அருகில் வசிப்பவர்களிடம் அண்ணனை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














