Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இதுதான் இந்தியா… உக்ரைனுக்கு வாரி வழங்கிய இந்தியா… உலகை உற்றுப் பார்க்க வைத்த மோடி-ஜெலென்ஸ்கி

Oredesam by Oredesam
August 24, 2024
in இந்தியா, உலகம், செய்திகள்
0
Narendra Modi Ukraine visit

Narendra Modi Ukraine visit

FacebookTwitterWhatsappTelegram

2022ம் ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய உக்ரைன், ரஷ்யா யுத்தம் இன்னமும் ஓயவில்லை. உக்ரைனின் 25 சதவீதம் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தும் பலனிக்கவில்லை.

இந்த நிலையில் போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி. சுதந்திரம் அடைந்த உக்ரைனுக்கு முதல் பயணம் என்ற பெருமையும் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில், கீவ் நகரம் மீது ரஷ்யா இதுவரை எந்த தாக்குதலும் நடத்தவில்லை. கடந்த 24 மணி நேரமாக மோடியின் வருகையை ஒட்டி தனது தாக்குதலையே நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கீவ் நகரத்தில் இதுவரை எங்கும் Siren ஒலிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, உக்ரைனின் கீவ் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை செய்தியை வலியுறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக இன்று கீவ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

குறிப்பாக இந்த பயணத்தின் போது, ​​மருத்துவ உதவிக்கான பீஷ்ம் கனசதுரத்தை இந்தியா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. ஆம், ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, ‘Project BHISHM’ திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த உதவியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் கிய்வில் வழங்கினார்.

போர்க்கள பூமியில், உலக நாடுகளால் உற்றுபார்க்கப்பட்ட இந்த சந்திப்பு சர்வதேச அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடனான சந்திப்பு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த போது ஜெலென்ஸ்கி அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதில் பரஸ்பரம் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த புகைப்படத்தை ஜெலென்ஸ்கி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, வைரலாகி உள்ளது.

பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சம் லைக்குகளை கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா போரினை நிறுத்தும் வல்லமை கொண்டவர் பிரதமர் மோடி என்று பல்வேறு நாடுகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த ஒற்றை போட்டோ, இணைய உலகில் பெரும் தாக்கத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்:-

March 2, 2020

Do You Need More Than A Smartphone Camera When Traveling?

December 30, 2019
ANNAMALAI BGR

மீண்டும் BGR… ரூ.4442 கோடி தனியாருக்கு தாரை வார்த்த ஸ்டாலின் ? ஷாக் கொடுத்த அண்ணாமலை.. பீதியில் தி.மு.க…

January 6, 2024
scam

காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலத்தில் 660 கோடி ஊழல்! ஆதாரத்துடன் அம்பலம்!

June 30, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x