Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.

Oredesam by Oredesam
July 11, 2020
in செய்திகள்
0
செடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும்! காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.
FacebookTwitterWhatsappTelegram

நமது வீட்டு சமையலறையின் காய்கறி தோல்கள், வெங்காயத் தோல், பழத்தோல் இவைகளை வைத்தே மண்புழு உரம் சுலபமாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். இந்த உரத்தை தயாரிக்க 30 லிருந்து 35 நாட்கள் எடுக்கும். அதிகமான சிரமம் எதுவும் இருக்காது. பின்வரும் குறிப்புகளை, சரியான முறையில் பின்பற்றினாலே, கடைக்குச் சென்று உரம் வாங்க அவசியமும் இருக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா பூ செடி, மல்லிகை பூச்செடி, சாமந்திப்பூ செடி செழிப்பாக பூப்பூக்கும். காய்கறி செடிகள், பழச் செடிகள், இவைகளில் அதிகப்படியான காய்கள், பழங்கள் காய்க்க, இந்த உரம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த உரத்தை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

உரம் தயாரிக்க 40% காய்கறி கழிவுகள் தோல்கள், 30% சதவிகிதம் வெங்காய தோல், 15% செம்மண், 10% கடையிலிருந்து வாங்கிவந்த மண்புழு உரம், வேப்பிலை 5%, இந்த விகிதத்தில் கலவையை சேர்த்துக்கொள்ளலாம். நன்கு புளித்த தயிர் ஒரு கப். மற்ற பொருட்கள் எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகவோ, குறைவாகவும் இருந்தாலும், வெங்காய கழிவுகள் அதிகமாக இருந்தால், மண்புழு உரத்தை மிக எளிமையாக தயார் செய்து விடலாம். தேவைப்பட்டால் பழ தோல்களை கூட சேர்த்துக்கொள்ளலாம். உரம் தயார் செய்ய நீங்கள் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளையும், பழ தோல்களையும் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு மீடியம் அளவு தொட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. அந்த தொட்டியில், சரியான முறையில் டிரைனேஜ் ஓட்டை இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த தொட்டியில், முதலில் ஒரு லேயர் செம்மண் தூவியபடி, போட்டுக்கொள்ளுங்கள். அடுத்தது மண்புழு உரம் தூவி விடவேண்டும். மூன்றாவது காய்கறி கழிவுகளை தூவியபடி போடவேண்டும். அடுத்ததாக ஒரு கப் அளவு தயிரை சேர்த்து விடுங்கள். செம்மண், மண் புழு உரம், காய்கறி கழிவு, இந்த அடுக்குகளை மீண்டும் ஒரு முறை தூவி, இறுதியாக வேப்பிலை தூவி, அதன்மேல் செம்மண் தூவி, கலவை கலப்பதை நிறைவு செய்து கொள்ளலாம். அனைத்தும் ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும் அளவிற்கு தூவிவிட்டால் போதும். இறுதியாக ஒரு கப் அளவு, தண்ணீரை தெளித்து விட வேண்டும். தேவையற்ற தண்ணீர் டிரைனேஜ் ஓட்டை வழியாக வெளியே வரும். அதை எடுத்து மீண்டும் உரத் தொட்டியிலேயே ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காதீர்கள். தொட்டியின் அடியில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையானது 25 நாட்கள் வரை வெய்யிலிலேயே இருக்க வேண்டும். 25 நாட்கள் ஒரு ஜக் அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 25வது நாள், இந்த கலவையை ஒரு கம்பி வைத்தோ அல்லது உங்களிடம் மண்ணைக் கிளறி விட எந்த பொருள் இருக்கிறதோ, அதை வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். அடியில் இருக்கும் கலவை மேலே வரவேண்டும். மேலே இருக்கும் கலவை அடியில் போகும் அளவிற்கு கலந்துவிடுங்கள். அப்போது, உங்களுக்கு உரம் கருப்பு நிறமாக மாறி இருப்பதை பார்க்கலாம். கிளறி விட்டு பின்பு 5 நாட்கள், தொட்டியில் இருக்கும் உரம் அப்படியே இருக்கட்டும். மீதமுள்ள ஐந்து நாட்களும் 1/2 ஜக் அளவு தண்ணீரை ஊற்றி வரவேண்டும். அதன் பின்பு, 30 வது நாள், இந்த தொட்டியில் இருக்கும் கலவையை ஒரு பெரிய கவரில், கொட்டி வெயிலில் காய விட்டு விடுங்கள். கருப்பு நிறத்தில் உதிரி உதிரியாக மண்புழு உரம் கடைகளில் எப்படி கிடைக்கின்றதோ, நீங்கள் வீட்டில் தயாரித்த இந்த உரமும் அதே நிறத்தில், அதே பக்குவத்தில் கிடைக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் செடி வைக்கும் தொட்டியில், மண்ணோடு சேர்த்து இந்த மண்புழு உரத்தை சேர்த்து வைக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டுச் செடி செழிப்பாக வளரும். உங்கள் வீட்டு பூச்செடிகளில், நிறைய பூ பூக்கும். நிறைய காய் காய்க்கும். இந்த மண்புழு உரம் தயாரிக்க 30 நாள் தேவைப்பட்டாலும், வேலைப்பளு அதிகம் இல்லை. உரக் கலவையை, தயார் செய்து வைத்துவிட்டால், அது அப்படியே ஓரமாக இருக்கும். தினமும் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும். கட்டாயம் இந்த உரக் கலவை உள்ள தொட்டி, 30 நாட்களும் நேரடி வெயிலில் தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

இன்று தமிழ்நாடு சுடுகாடா மாறி இருக்கு என்றால் இதற்கு யார் காரணம்?

May 17, 2021
கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? தேவநாதன் யாதவ் காட்டம்..!

August 3, 2021
பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி.. புகார் சொன்னவர் கைது .. மனவருதத்தில் அவரது மகன் தீ குளித்து  தற்கொலை !

பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி.. புகார் சொன்னவர் கைது .. மனவருதத்தில் அவரது மகன் தீ குளித்து தற்கொலை !

January 12, 2022
பாஜக 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், கொரோனா வைரஸுக்கு மத்தியில் தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு மோடி தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறார்.

பாஜக 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், கொரோனா வைரஸுக்கு மத்தியில் தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு மோடி தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறார்.

April 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x