Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் தனது உரையை முடித்தார்.

Oredesam by Oredesam
January 5, 2022
in செய்திகள், தமிழகம்
0
‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் தனது உரையை முடித்தார்.
FacebookTwitterWhatsappTelegram

 ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05) கவர்னர் ஆர்என் ரவி உரையுடன் துவங்கியது. இசைக்கல்லூரியை சேர்ந்த ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர் . கூட்டத்தொடரில் வணக்கம் எனக் கூறி உரையை துவங்கினார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கவர்னர் பேசியதாவது: புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தமிழக மக்கள் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்ஸிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்தார்.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.மெகா முகாம்கள் நடத்தி அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 86.95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழகத்தில்தான்.

கொரோனா நிவாரண நிதியாக 543 கோடி ரூபாய் வந்த நிலையில் 541.64 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த 27,432 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரம், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் கொரோனாவை தமிழக அரசு வெற்றிகரமான கட்டுப்படுத்தியது.

புதிய அரசில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.387 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ‛நம்மை காக்கும் 48′ திட்டத்தின் கீழ் விபத்திற்குள்ளான 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 42.99 லட்சம் மக்கள் பலன்பெற்றுள்ளனர்.

மழை வெள்ளத்தால் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ள காலங்களில் அணையில் இருந்து நீர் திறப்பதை அரசு முறையாக கையாண்டுள்ளது. நிவாரண பணிகளை முதல்வரே முன்னின்று முடுக்கிவிட்டுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தரமான செயல்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 2.99 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி வருவாயை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பணியாற்றுகின்றன.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும். அதேநேரத்தில் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதி தரக்கூடாது.

இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை 2024 ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும்.தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.



கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தின் கீழ் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது. ஆசிரியர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். தமிழகம் முழு அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். 24344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்

500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும். தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்காவையும், தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் துவங்கி வைப்பார். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் இலவச பஸ்களில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

ஜெய்ஹிந்த்

கவர்னர் தனது உரையை, ‘நன்றி’ ‘வணக்கம்’ ‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி முடித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

India Pak

பாகிஸ்தானுக்கு அடுத்த இடியை இறக்கிய இந்தியா! யாரும் எதிர்பார்க்காத சம்பவம்! அடுத்தடுத்து ஷாக்கை கொடுத்த இந்தியா

May 4, 2025
துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

December 11, 2021
rasipalan

ஜோதிடம் என்றால் என்ன ! அது உண்மையா ?

March 5, 2024
விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

September 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x