சமூகவலைத்தளங்ளை விட்டு விலக வேண்டாம் டிரெண்டிங் ஆகும் ‘நோ சார்’ ஹேஸ்டேக்

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக நேற்று ஒரு பதிவை செய்தார் . அது உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது. உலகத்தில் அதிக நபர்கள் பிரதமர் மோடியை பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளங்கள் விட்டு விலகுவதாக பதிவிட்ட டுவிட்டை அடுத்து, ‘NoSir’ என பதிவிட்டு வருகின்றனர். இதனால், ‘#NoSir’ ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக, பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டார். அவரது டுவிட்டர் பதிவுக்கு, பலரும் ‘NoSir’ என பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து ‘#NoSir’ ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Exit mobile version