Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

எதிர்பார்த்திடாத பாக் ! கடவுள் தான் காப்பாத்தணும்! கதறி அழுத பாதுகாப்பு துறை அமைச்சர்! அதிர வைத்த இந்தியாவின் வார்த்தை..

Oredesam by Oredesam
May 2, 2025
in இந்தியா, உலகம், செய்திகள்
0
Pak Army

Pak Army

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் கற்பனை செய்ய முடியாத பதிலடியை இந்தியா தரும் என்று மோடி எச்சரித்துள்ளார். மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ என்று தெரியாமல் அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான், தினசரி ஏதாவது ஒன்றைச் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது மாதம் முழுக்க கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டனர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசிக்க வந்த அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சமீப ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது அறியப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது. இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து. அதேபோல பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்து சொந்த நாட்டிற்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.’விரைவில் போர் வரலாம்; 24 மணி நேரத்தில் வந்துவிடும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,” என பாகிஸ்தான், ராணுவ அமைச்சர் க்வாஜா முஹமது ஆசிப் அறண்டு போய் கதறுகிறார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

வான்வெளி மூடல்
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி நடத்துவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் ராணுவமே எடுத்துக் கொள்ளலாம் என்று முழுச் சுதந்திரத்தையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதனால் இந்தியா எப்போது எப்படித் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அதாவது மே மாதம் முழுவதும் தினசரி கராச்சி மற்றும் லாகூர் விமான மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிட்ட நாட்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் பதிலடியை நினைத்துப் பயந்து போய் கிடக்கும் பாகிஸ்தான் தினசரி இதுபோல ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

பாகிஸ்தான் சொல்வது என்ன
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “மே 1 முதல் மே 31 வரை உள்ளூர் நேரப்படி தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குறிப்பிட்ட வான்வெளி மூடப்படும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளியின் குறிப்பிட்ட பகுதியைத் தினசரி மூடுவதால் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படாது என்றும் தடைசெய்யப்பட்ட நேரங்களில் விமானங்கள் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்படும் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான்
முன்னதாக நேற்றைய தினம் தான் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து விமானங்களுக்கும் இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் விமானங்கள் தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் போது இந்தியாவைச் சுற்றிச் செல்ல வேண்டும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அடியாக இருக்கும். மேலும், இரு நாட்டுப் பதற்றமும் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாகச் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரம் வேண்டுமானாலும் நம்நாட்டு படைகள் பாகிஸ்தானை பதம் பார்க்கலாம் என்ற நிலை தான் உள்ளது.
அதுமட்டுமின்றி ராணுவப்படை, விமானப்படை, கடற்படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதனால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது. நம் நாட்டின தாக்குதலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் நம் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க பாகிஸ்தான் தனது ரேடார் சிஸ்டங்களை எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது.ரேடாரை களமிறக்கி இருந்தாலும் கூட அது பெரிய அளவுக்கு அந்த நாட்டுக்கு பயனளிக்காது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் நம்மிடம் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் போர் விமானம், ஏவுகணைகள் உள்ளன. ஒருவேளை போர் விமானங்கள், ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதை அந்த நாட்டின் ரேடார் கண்டுப்பிடித்தாலும் கூட அதனை பாகிஸ்தான் இடைமறித்து அழிக்க வேண்டுஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இடைமறிப்பு திறனில் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கி இருக்கிறது. எனவே இந்தியாவின் தாக்குதலை தடுப்பது என்பது பாகிஸ்தானுக்கு சவால் தான் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள்.

மேலும் இந்தியாவை கண்டு பயப்படமாட்டோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வந்தாலும் கூட அவர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இது ராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதை காட்டும் வகையில் உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:

‛‛இந்தியா உடனான மோதலுக்காக வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் ஏற்படாமல் இருக்க நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியா உடனான மோதல் என்பது குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலைமையை தவிர்க்க பல நாடுகள் முயற்சி மேற்கெண்டு வருகின்றன” என்று கூறினார். இப்படி இந்தியாவுடனான மோதலுக்கு பயந்து, சொந்த ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார் என பாக் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய காஷ்மீர் தாக்குதல் குறித்து சார்பு இல்லாத நியாயமான சர்வதேச விசாரணையை நாங்கள் கோருகிறோம்” என்றார். இதன்மூலம் சண்டை வேண்டாம். விசாரணை மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

JYAKUMAR

காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு! அண்ணாமலை வெளியிட்ட முக்கிய ஆதாரம்! சிக்கலில் மூத்த தலைகள்?

May 4, 2024
குஜராத் மாநிலத்தில் விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல்.

குஜராத் மாநிலத்தில் விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல்.

May 2, 2024

உலக வரலாற்றில் முதல் முறை மேக் இன் இந்தியா மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட சக்திவாய்ந்த இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது.

May 20, 2020
விடுதலை செய்யப்பட்ட  அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

விடுதலை செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

August 10, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x