Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீலகிரி அரசு பேருந்தில் தீண்டாமை: பேருந்தைச் சிறைபிடித்த படுகர் இன மக்கள்: – SC, ST மக்களின் மனவேதனை!

Oredesam by Oredesam
March 1, 2024
in செய்திகள்
0
koranur

koranur

FacebookTwitterWhatsappTelegram

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பட்டியலினத்தவர் மீதான சாதி ரீதியான தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதுவும் திமுக அமைச்சர்களே இச்செயலில் ஈடுட்டுள்ளார்கள. மேலும் நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம், கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது ‌மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வேங்கைவயல் சம்பவம் என தொடர்ந்து பட்டியலின மக்கள் திமுக ஆட்சியில் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொரனூர் கிராமம். இந்த கிரமாம் மலைகளின் ராணி என போற்றும் ஊட்டியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கொரனுர் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிக்கப்பத்தி மந்து என்ற தோடர் பழங்குடி கிராமம். இந்த இரண்டு கிராமங்களுக்கும் முறையான சாலை வசதி இல்லை தங்களின் போக்குவரத்து தேவைக்கு எப்பநாடு கிராமம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை மட்டுமே நம்பி இருந்தனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

எப்பநாட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள கொரனூர் வரை அரசு பேருந்தை இயக்கினால் கொரனூர் கிராம மக்கள் பயனடைவதுடன், பிக்கப்பத்தி மந்து மக்களின் நடைப்பயணம் 4 கிலோமீட்டரில் இருந்து 2 கிலோமீட்டராக குறையும் என்பதால், எப்பநாடு வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை 2 கிலோமீட்டர் நீட்டித்து கொரனூருக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க வேண்டும் என இரண்டு கிராம மக்களும் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கொரனூர் வரை அரசு பேருந்து சேவையை நீட்டித்து உத்தரவிட்டது. ஊட்டியில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கொரனூர் கிராமத்திற்கான புதிய பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் மாலை ஊட்டியிலிருந்து எப்பநாட்டிற்கு பேருந்து சென்ற நிலையில், அங்கிருந்து கொரனூருக்கு பேருந்தைச் செல்லவிடாமல் எப்பநாடு மக்கள் தடுத்துள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, `உங்கள் கிராமத்திற்கு பேருத்தை அனுப்ப முடியாது’ என இறங்கி நடக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அச்சமடைந்த அந்த மக்கள் நடந்தே சென்றுள்ளனர். அரசு பேருந்தை தங்கள் கிராமத்திற்கு வரவிடாமல் தடுக்கும் எப்பநாடு கிராம மக்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடி, பட்டியல் இன மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவின் பேரில் நேற்று மாலை கொரனூர் சென்ற அரசு பேருந்தை எப்பநாட்டிலியே படுகர் இன மக்கள் தடுத்து நிறுத்தயுள்ளனர். பேருந்தை இயக்கவிடாமல் நள்ளிரவு வரை சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

கொரனூருக்கு பேருந்து செல்ல அனுமதிக்க முடியாது என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உத்தரவின் அடிப்படையில் தங்களின் கிராமத்திற்கான பேருந்து சேவையை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், ” அடிப்படை தேவைக்காக வெளியில் செல்ல இரண்டு கிராம மக்களும் 6 முதல் 8 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பேருந்து சேவையை நீட்டிக்க வலியுறுத்தி பல ஆண்டுகள் போராடினோம். ஒருவழியாக இப்போது தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பட்டியல் இன மக்கள் வாழும் கிராமத்தின் பெயரில் அரசு பேருந்து இயக்குவதையோ எங்கள் ஊருக்கு பேருந்து வந்து செல்வதையோ பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படுகர் இன மக்கள் விரும்புவதில்லை.

இதன் காரணமாக எங்களை இப்படி வஞ்சிக்கிறார்கள். ஆனால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளோ எங்களை அனுசரித்துப் போகச் சொல்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தீண்டாமையைக் கடைப்பிடித்து அரசு பேருந்து சேவையை தடுக்கும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தெரிவித்த எப்பநாடு கிராம‌ மக்கள் சிலர், “எங்கள் ஊருக்கான‌ பேருந்தை அப்படியே இயக்குங்கள். அவர்கள் கிராமத்திற்கு என்று புதிதாக வேறு பேருந்தை இயக்குங்கள் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

August 7, 2021
காலில் விழுந்தவரின் காலில் விழுந்த பாஜக தலைவர் அண்ணாமலை.

காலில் விழுந்தவரின் காலில் விழுந்த பாஜக தலைவர் அண்ணாமலை.

November 16, 2022
மாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்.

October 31, 2020
மாலை முரசு தலைமை செய்தியாளர் இப்படிப்பட்டவரா ! கிஷோர் கே சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்!

மாலை முரசு தலைமை செய்தியாளர் இப்படிப்பட்டவரா ! கிஷோர் கே சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்!

December 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x