வைகுண்ட ஏகாதசி டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் – தேவஸ்தான செயல் அலுவலர்
வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் எடுத்தவர்கள் மட்டுமே திருப்பதிக்கு வர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இம்முறை 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















