இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சார்ந்தவர் வீரமரணம் அடைந்த மேஜர் விபூதி டவுண்டியால், சென்ற ஆண்டு பிப்ரவரி 17 ஆம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த, 20 மணி நேர சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார். அவருடன், மூன்று ராணுவ வீரர்களும் வீரமரணமடைந்தனர்.

மேஜர் விபூதி டவுண்டி அவரின் வயது 35 இவருக்கு கல்யாணம் ஆகி ஒன்பது மாதங்கள் தான் ஆகின. இந்த நிலையில் அவர் வீரமணமடைந்தார் அவரின் உடல் அவரின் சொந்த ஊரான டேராடூனுக்கு கொண்டு வரப்பட்டது.

திருமணமான, ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தி, கணவரின் காதருகே சென்று, ‘ஐ லவ் யூ’ என, அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது, அனைவரின் இதயமும் கசிந்தது.

இந்த சம்பவம் நடந்து, ஓராண்டிற்குள் கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில்இணைகிறார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், இராணுவ அதிகாரியாவதற்கான தேர்வை எழுதியுள்ளார் அதில் வெற்றியும் கண்டுள்ளார். விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ஓராண்டிற்கு பயிற்சியில் இணைய உள்ளார் நிகிதா.

இராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அவர் இந்தியாவின் மீது அதிக அளவு அன்பும் பற்றும் கொண்டவர் , அதற்காக கடந்த, ஓராண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ”என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

அதுதான் எனக்கு பலத்தை, மனதிடத்தை அளிக்கிறது,” என, நிகிதா கூறியுள்ளார். வீரமங்கைக்கு சல்யூட் !

Exit mobile version