பாரத திருநாட்டின் இராணுவ வீரர்களை இழிவாக பேசிய நடிகர் விஜயின் தந்தை.

இந்திய ராணுவத்தார் அல்லது தேசாபிமானிகள் அவசரமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு

அது இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் இதர ராணுவ உயர் பொறுப்பில் இருப்பவர்களை இழிவு படுத்தும் வகையில் எஸ்.ஏ சந்திர சேகரன் எனும் ஆட்சி வெறியன் செய்திக்கும் மடதடத்தனமான காரியத்துக்காக‌

பாகுபலி நாசர் போல தன் மகனை தமிழ்நாட்டின் அரசனாக முடிசூட வைக்கும் கனவில் இருக்கும் அந்த பேராசை நபர் நேற்று ஒரு கட்சி பதிவு செய்திருகின்றார்

அதன் பெயர் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்”

விஜய் என்பவன் யார்? இந்நாட்டுக்கு அவன் கிழித்தது என்ன?

அவன் காஷ்மீரிலே களம் கண்டானா? வங்கபோர் கண்டான? கார்கில் கண்டானா? இல்லை இப்பொழுது சீனாவுக்கு எதிராக களம் புகுந்தானா

காஷ்மீர் பனிமலையில் அரைகுறை ஆடை நடிகையுடன் அவன் கேமரா முன் ஆடியதை தவிர என்ன செய்தான்?

நிஜ சூட்டிங்கை பாகிஸ்தான் துப்பாக்கியில் கொடுத்த பொழுது கேமரா ஷூட் கொடுத்து கொண்டிருந்த இவன் என்ன கிழித்தான்?

பொம்மை துப்பாக்கியினை தூக்கி சினிமா செட்டப்பில் 4 பேரை சுடுவதாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வரிகட்டாமல் ஓடியதை தவிர என்ன கிழித்தான் விஜய்?

ஒரு கோமாளி, ஒரு கூத்தாடி 4 வார்த்தை சொந்தமாக பேச தெரியாதவன் அகில இந்திய‌ தளபதியா?

மானமுள்ள இந்தியன் இதை ஏற்க முடியுமா?

அவனெல்லாம் தளபதி என்றால் கரியப்பா, திம்மையா, மானெக்ஸா , சுந்தர்ஜி என நீண்டு இன்று உலகுக்கு சவால்விடும் பிவின் ராவாத் முதல் நேபாளத்தை ஊமை குத்தாக குத்தும் நரவாணே வரை யார்?

தளபதி எனும் கொடுமை திராவிட இம்சைகளால் இங்கு அரசியலாக்கபட்டது, இன்று ஸ்டாலின் என்பரால் அது காமெடியாகிவிட்டது

எனினும் அவர்கள் சட்டபடி எங்கும் அந்த பெயரை பயன்படுத்தவில்லை

“அகில இந்திய தளபதி” இயக்கம் என ஒரு கட்சியினை எப்படி இங்கு பதிய அனுமதிக்கலாம்?

எப்படி அந்த “அகில இந்திய தளபதி விஜய்” என சட்டம் ஏற்கலாம்?

சமீபத்தில் பாகிஸ்தானிடம் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட அபிநந்தனின் ஷூவினை துடைக்க விஜய்க்கு தகுதி உண்டா? இல்லை சந்திரசேகருக்கு உண்டா?

இங்கு பிணமாய் வந்த ராணுவ வீரர்களின் தியாகம் எங்கே? வரி கூட கட்டமால் ஓடி ஒளியும் இந்த தகப்பனும் மகனும் எங்கே?

கரியப்பா தன் மகனை ராணுவ பைலட்டாக்கி அவன் பாகிஸ்தானிடம் சிக்கியபொழுது கூட சிங்கமென நின்றிருந்தான்

அந்த வீர தியாக தகப்பனும் மகனும் எங்கே? இந்த கூத்தாடி கும்பலின் தகப்பனும் மகனும் எங்கே?

எப்படி இந்த கோமாளி கூட்டம் “அகில இந்திய தளபதி” என பட்டம் சுமக்க முடியும்? எவன் கொடுத்த தைரியம்

எல்.கே.ஜி முதல் 10 வகுப்பு வரை சில சிறுவர்களை ரசிகன் என கொண்டிருக்கும் ஒருவன் அகில இந்திய தளபதி என்றால் இங்கு அவ்வளவு மடையர்கள் நிறைந்துவிட்டார்களா என்ன?

இதெல்லாம் இந்திய ராணுவத்தை கேவலபடுத்தும் விஷயங்கள், அவர்களின் தியாகத்தையும் வீரமரணத்தையும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் நாட்டை காத்து நிற்கும் சவாலையும் கொச்சை படுத்தும் விஷயங்கள்

எஸ்.ஏ சந்திரசேகர் ஒன்று மனநலம் பிறண்டவராவ இருக்க முடியும் அல்லது அந்நிய நாடுகளின் கைகூலியாக இருக்க முடியும்

அப்படிபட்ட நபரை இங்கு அனுமதிக்க முடியாது

ராணுவத்தார் இதை சும்மா விட கூடாது, எல்லை தாண்டிய காமெடியினை செய்யும் இந்த நபரை நீதிமன்றங்கள் தானே முன்வந்து கண்டிக்கட்டும்

தளபதி என்பது வணங்க வேண்டிய பெயர், போற்ற வேண்டிய பெயர், இன்றும் ராணுவத்தை காக்கும் பெரும் சுமமையினை சுமக்கும் ஒரு பட்டம்

அதை ஒரு கூத்தாடி கூட்டம் “அகில இந்திய தளபதி” என சுமப்பதை ஏற்று கொள்ளவே முடியாது

இது இத்தேசதின் முப்படைகளின் தளபதி மாண்புமிகு குடியரசு தலைவருக்கும், கூட்டுதளபதி ராவாத்துக்கும் , தலமை தளபதி ரணவாத்துக்கும் இன்னும் பல உபதளதிகளுக்கும் அவமானமான விஷயம்

முன்னாள் வீரதளபதிகளான ஜெனரல் திம்மையா, கரியப்பா,மானெக்சா, ஜேக்கப் ஆகியோருக்கு செய்யபடும் அவமரியாதை

இதை அரசும் நீதிமன்றமும் உடனே தலையிட்டு களைந்து, மனநலம் சரியில்லா பாகுபலி நாசரான அந்த சீழ்பிடித்த ஊனமூளை கொண்ட சந்திரசேகர் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அப்படியே திமுக தளபதி இம்சைகள், இரட்சணிய சேனை என ஒரு சபையினை வைத்து கொண்டு ராணுவ பதவிகளை போதகர்களுக்கு வழங்கி கமாண்டர், பிரிகேடியர், ஜெனரல் என விளையாடி கொண்டிருக்கும் அந்த கோஷ்டிக்கும் பலத்த எச்சரிக்கை செய்யபட வேண்டும்

ராணுவத்தாரையும் அவர்களின் பெரும் பதவியினையும் கொச்சைபடுத்தும் எல்லா விஷயங்களும் களையபட வேண்டும்

முதல் அடி இந்த எஸ்.ஏ சந்திரசேகர் மேல் இருந்து தொடங்கட்டும்.

கட்டுரை:- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version