இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் நிர்வாகியும் கரூர் எம்பியுமான ஜோதிமணி பிரதமர் மோடியையும் கல்லால் அடிக்கவேண்டும் என்று பேசியது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட, நிர்வாகிகள் ஜெயகுமார், சுகுமார்,சதாசிவம்,தனசேகர்,நகர தலைவர் ஜெயசங்கர்,ஓன்றிய நிர்வாகிகள் புகார் மனு அளித்து வருகின்றனர்.
புகார்மனுவில் :- காங்கிரசை சேர்ந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர்
C.ஜோதிமணி தொலைக்காட்சி விவாத மேடையில் பாரத பிரதமர் மாண்புமிகு மோடிஜி அவர்களே தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் அந்த அம்மையாரை வன்மையாக தண்டிக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















