விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பல இடங்களில் பிரச்சாரம்

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கலிவரதன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று விக்கிரவாண்டி தொகுதி கெடார் கிராமத்தில் விவசாயின் நண்பன் மோடி என்ற தலைப்பில் மாநில செயலாளர் சுமதிவெங்கடேஷ்,மாவட்ட தலைவர் கலிவரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார் மற்றும் மயிலம் விக்கிரவாண்டி தொகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ,மாவட்ட செயலாளர்கள் ,மாவட்ட துணைத்தலைவர்கள் ,ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version