கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், PEN DRIVE மூலம் மாணவர்களுக்கு பாடங்களை வழங்கிய தமிழகத்தை சேரிந்த ஆசிரியைக்கு பிரதமர் மோடி மான்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், குன்னத்தூர் அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா தமிழ் மொழி பாடங்களை வீடியோ பதிவு செய்து PEN DRIVE மூலம் மாணவர்களுக்கு வழங்கினார். இதனை அறிந்த பிரதமர் மோடி மான்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டினைத் தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னை பற்றி பேசியது உத்வேகத்தை அளிப்பதாகவும், பிரதமர் வாழ்த்தியதை சக ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமர்பிப்பதாக ஆசிரியை ஹேமலதா தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















