பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? ஐ.லியோனி நியமனம் – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ஐ.லியோனியின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். ஐ.லியோனி பட்டிமன்ற பேச்சளராக நடுவராக இருந்தவர். அவர் அடிக்கடி பெண்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பேசுகையில் பெண்களின் இடுப்பை பற்றி விமர்ச்சித்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவர்தான் தற்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவர். ஐ.லியோனி நியமனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்.

Exit mobile version