Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

Oredesam by Oredesam
May 7, 2024
in செய்திகள், தமிழகம்
0
Kanyakumari,

Kanyakumari,

FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களில் கடல் அலையில் சிக்கி குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் சுற்றுலா பயனைகளிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதீத கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிப்பதால், கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளில் மாற்றம் இருக்கும் என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடல் சீற்றத்துடன் பெரிய அலைகள் எழுப்பும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

குறிப்பாக, குமரி கடற்கரையில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அபாயகரமான பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் நேற்று தேங்காய் பட்டணம் கோடிமுனை, குளச்சல், பொழிக்கரை போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட்டது.

இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த லெமூர் கடற்கரைக்கு ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் சுற்றுலா வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ – மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக வந்த மாணவர்கள், திருமணத்திற்குப் பின் லெமூர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு, 8 மாணவர்கள் கடலில் இறங்கிக் குளித்த நிலையில் அவர்களை எதிர்பாராத விதமாக ராட்ச அலை இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள், மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்னர், மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேலும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம்,காயத்திரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் சர்வ தர்சித் ஆகிய 5 பேரின் உடலும் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது அங்கிருந்த காவலர் மாணவர்களை எச்சரித்தார். இருப்பினும், மாணவர்கள் அலட்சியமாக விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், எதிர்பாராத விதமாகப் பெரிய அலை வந்து மாணவர்களை இழுத்துச் சென்றனர்.

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை காப்பாற்றச் சென்ற நிலையில், இருவர் உயிரிழந்து விட்டனர். சம்பவம் நடந்ததும் தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வருவதற்குக் காலதாமதமானது. அவர்கள் சீக்கிரம் வந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்” என்றார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் இருவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது அங்கு இருந்த மீனவர்கள் ஒடி சென்று தந்தை பிரேமதாஸ் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் இன்று சடலமாக மீட்டனர்.

இதை போல் சென்னையில் இருந்து 16 பேர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அவர்களில், மனோஜ்குமார் மற்றும் விசூஸ் ஆகிய இருவர் கடல் கரை பகுதியில் நின்று கொண்டு இருந்த வேளையில் இருவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Annamalai IPS

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! தி.மு.க வை எச்சரித்த அண்ணாமலை!.

June 24, 2022
சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

April 21, 2021
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு.

December 26, 2024
அம்ஜத் பாட்சாவின் 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி மயக்கம்! மக்களே  உஷார்!

அம்ஜத் பாட்சாவின் 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி மயக்கம்! மக்களே உஷார்!

September 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x