Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

Oredesam by Oredesam
May 7, 2024
in செய்திகள், தமிழகம்
0
Kanyakumari,

Kanyakumari,

FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களில் கடல் அலையில் சிக்கி குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் சுற்றுலா பயனைகளிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதீத கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிப்பதால், கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளில் மாற்றம் இருக்கும் என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடல் சீற்றத்துடன் பெரிய அலைகள் எழுப்பும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

குறிப்பாக, குமரி கடற்கரையில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அபாயகரமான பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் நேற்று தேங்காய் பட்டணம் கோடிமுனை, குளச்சல், பொழிக்கரை போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட்டது.

இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த லெமூர் கடற்கரைக்கு ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் சுற்றுலா வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ – மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக வந்த மாணவர்கள், திருமணத்திற்குப் பின் லெமூர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு, 8 மாணவர்கள் கடலில் இறங்கிக் குளித்த நிலையில் அவர்களை எதிர்பாராத விதமாக ராட்ச அலை இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள், மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்னர், மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேலும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம்,காயத்திரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் சர்வ தர்சித் ஆகிய 5 பேரின் உடலும் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது அங்கிருந்த காவலர் மாணவர்களை எச்சரித்தார். இருப்பினும், மாணவர்கள் அலட்சியமாக விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், எதிர்பாராத விதமாகப் பெரிய அலை வந்து மாணவர்களை இழுத்துச் சென்றனர்.

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை காப்பாற்றச் சென்ற நிலையில், இருவர் உயிரிழந்து விட்டனர். சம்பவம் நடந்ததும் தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வருவதற்குக் காலதாமதமானது. அவர்கள் சீக்கிரம் வந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்” என்றார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் இருவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது அங்கு இருந்த மீனவர்கள் ஒடி சென்று தந்தை பிரேமதாஸ் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் இன்று சடலமாக மீட்டனர்.

இதை போல் சென்னையில் இருந்து 16 பேர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அவர்களில், மனோஜ்குமார் மற்றும் விசூஸ் ஆகிய இருவர் கடல் கரை பகுதியில் நின்று கொண்டு இருந்த வேளையில் இருவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !

July 16, 2025
இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாளில் மாஸ் காட்டிய பாஜக இளைஞரணி தலைவர்.

இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாளில் மாஸ் காட்டிய பாஜக இளைஞரணி தலைவர்.

October 21, 2020
பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு

February 11, 2021
tasmac

முக்கிய பாயிண்டுகளை பிடித்து டாஸ்மாக் நிர்வாகத்தை நொறுக்கிய அமலாக்கத்துறை.. விழிபிதுங்கிய தமிழக அரசு.. அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அதிரடி

April 25, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x