Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வெள்ளை அறிக்கைவிட்டு விளம்பரம் தேடி ! மக்கள் நலம் பறிபோயிற்று! தியாகராஜனை வறுத்தெடுத்த கிருஷ்ணசாமி.

Oredesam by Oredesam
September 21, 2021
in செய்திகள், தமிழகம்
0
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!
FacebookTwitterWhatsappTelegram

மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! நவநாகரிக காலத்தில் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் வாகனங்கள் இன்றியமையாததாகிவிட்டன. இருசக்கர வாகனங்கள் பெட்ரோலிலும் பிற வாகனங்கள் டீசலிலும் இயங்குகின்றன. இந்தியா இன்று வரையிலும் வாகன எரிப்பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோலிய நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லரை விலையை தினமும் மாற்றியமைக்கும் உரிமையைப் பெற்றுக் கொண்டன.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் சில்லரை விலை குறைவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்துப் பேசுகின்ற போது, மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி ஒன்றையொன்று குற்றம் சுமத்துவதிலேயேக் குறியாக இருக்கின்றன.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

விலையேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் மத்திய, மாநில அரசுகளின் அபரிமிதமான வரிவிதிப்புகளே ஆகும்.எனவே தான், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிவிதிப்பை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று, பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டுமென்று பேசாத மேடையில்லை, அரங்குகளில்லை.

2017-ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டுமென்று ஸ்டாலினும் அவரது புதல்வர் உதயநிதியும் தொடர்ந்து பேசி வந்தனர்.2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக “டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைவாசியைக் குறைக்க வேண்டுமெனில், அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தேர்தல் நெரங்களில் பல கூட்டங்களில் பேசினார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து நான்காவது மாதம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதுவரை 2 ஜி.எஸ்.டி. கூட்டங்கள் நடைபெற்றுவிட்டன.முதல் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்டு முழங்கிய பழனிவேல்தியாகராஜன், இரண்டாவதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை.லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியமான நிகழ்ச்சி நிரலே டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தான்.

”வளைகாப்பிற்குத் தேதி கொடுத்ததால், கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை” என்பது போன்றச் சொத்தைக் காரணங்களைச் சொல்லி, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக்கான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பழனிவேல்தியாகராஜன், தனது துறையின் மூத்த அதிகாரி மூலம், எழுதிவைக்கப்பட்ட அறிக்கையை அந்த கவுன்சிலில் வாசித்திருக்கிறார்.

அதில், ”எஞ்சியுள்ள சில உரிமைகளையும் நாங்கள் (தமிழக அரசு) இழக்க விரும்பாததால், பெட்ரோல், டீசல் உற்பத்திப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி எல்லைக்குள் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று அரசு அதிகாரி மூலம் பதிவு செய்திருக்கிறார்.இதே கருத்தை கடந்த அரசு சொன்னபோது, அதை அடிமை அரசு என்று விமர்சனம் செய்தார்கள்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், அனைத்து தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகிறார்கள்.பெட்ரோல், டீசல் உற்பத்திப் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதன் மூலம், இப்பொழுது இருக்கக் கூடிய விலையிலிருந்து 50%க்கு கீழ் விலையும் குறையும், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.

எனவே அதற்கென்று கூட்டப்பட்டக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு தனது கருத்தை வலுவாக வலியுறுத்தியிருந்தால், பிற மாநிலங்களாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, இப்பொழுது பெட்ரோல், டீசல் பொருட்களும் ஜி.எஸ்.டி. வளையத்திற்குள் வந்திருக்கும்; அதனால் 140 கோடி மக்களும் பலன் பெற்றிருப்பார்கள்; ஆனால், மாநில அதிகாரம் குறித்துப் பேசி, அந்த அரிய சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டுவிட்டார்கள்.

”ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்றும், ”வெள்ளையறிக்கை வெள்ளரிக்காயாகத்தான் இருக்கும்” என்றும் முன்பே நாம் சொன்னோம். அதற்கேற்றாற்போல இப்பொழுது, பெட்ரோல், டீசல் பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.தேர்தலுக்கு முன்பு வாக்குகள் வாங்கும் வரையிலும் அள்ளிவீசிய வாக்குறுதிகள் எல்லாம், நூறே நாட்களில் ஆடிக்காற்றில் பறந்ததைப் போல பறந்துவிட்டன.ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வாக்குறுதிகளுமே வெற்றுறுதிகளாக மாறி வருகின்றன.மாநிலங்களுக்கான அதிகாரம் மக்களுக்கு சேவை செய்யவே!

மக்கள் வாக்களித்தது அவர்களின் பசியைப் போக்கவே; ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியைத் தீர்க்க அல்ல.”வளைகாப்பே முக்கியம்; விலைக்குறைப்பு முக்கியமல்ல!””மாநில அதிகாரம் பேசி, மக்கள் நலம் பறிபோயிற்று!! என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் தொகுதியில் 14 சுற்று எண்ணிக்கையின் பின்னர் கட்சி நிலைகள்

February 14, 2020

Smelter-grade alumina production reaches 2 million tons: Local firm

February 5, 2020
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இனி வாய்ப்பே இல்லை திமுக அரசை சாடிய ராமதாஸ் !

November 18, 2024
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !

February 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x