Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அமலாக்க துறையின் லிஸ்டில் உள்ளது அடுத்தடுத்து யார்.. அமித் ஷா சொன்ன அமைச்சர்கள்… அலறும் அறிவாலயம்

Oredesam by Oredesam
March 7, 2025
in செய்திகள்
0
மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் மணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல்… செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத்துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை மேலாண் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும், டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பான பணப்பரிவர்தனைகள் சட்டவிரோதமாக செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத்துறை செய்து வருவதாக கூறப்படுகின்றது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதற்கிடையே உச்சநீதிமன்றமும் தனது கவலைகளை கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்து இருந்தது. “நாங்கள் ஜாமீன் வழங்குகிறோம், மறுநாள் நீங்கள் சென்று அமைச்சராகிறீர்கள். அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உங்கள் பதவியில் இருப்பதால் சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற எண்ணத்தில் யாராவது இருப்பார்கள். இதில் என்ன நடக்கிறது?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இருப்பினும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய செப்டம்பர் உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் டாஸ்மாக்கில் கமிஷனில் ஒரு பங்கு கோபாலபுரத்துக்கும் செல்வதாக தகவல் ஆல்ரெடி கசிந்து வந்தது. மின்சாரத்துறை தமிழக மின்வாரியத்திற்கு, 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய, ‘டெண்டர்’ விட்டதில், 397 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீது, புகார் எழுந்தது. செந்தில் பாலாஜியை தட்டினால் கோபாலபுரத்தின் உள்ளே செல்ல வழி கிடைக்கும் என அமலாக்கத்துறை முடிவு செய்துதான் டாஸ்மாக், மற்றும் மின்சார கொள்முதல் தொடர்பாக களத்தில் இறங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் காலை தீடீரென் சோதனையில் ஈடுபட்டனர்.இதற்கும் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தியதற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் நகர்ந்துள்ளது இந்த சோதனை. இந்த சோதனை திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது,கோபாலபுரம் வரை அமலாக்கத்துறை பாய தயாராகிவிட்டது இனி ஆண்டவன் விட்ட வழி என முதல்வரின் ஐபி ரிப்போர்ட் கூறிவிட்டதாம். இதனிடையே டெல்லி க்கு விரைகிறதாம் அறிவாலயத்தின் முக்கிய தலைகள்.. அமித்ஷா வந்து சென்ற நிலையில் அதிரடியில் இறங்கியுள்ளது அமலாக்கத்துறை மேலும் பலசம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையில் பாஜக கட்சி அலுவலக திறப்பு விழாவில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது, அவரது பேச்சிலேயே அமலாக்கத் துறை ஆபரேஷனுக்கான அறிகுறிகள் தென்பட்டன. திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

’தமிழ்நாட்டில், சட்டவிரோத மதுபானம் குறித்து புகார்கள் வரும்போது, ​​அதை தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று சட்ட விரோத மது வணிகம் தமிழ்நாட்டில் நடப்பதாக தனது பேச்சில் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ED search Minister Senthilbalaji

அதுமட்டுமல்ல… திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆர்எஸ்எஸின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் அவர்களின் உரையிலிருந்து 5 முக்கிய கருத்துக்கள்.

April 26, 2020

Government introduces new rules for public university admission

February 2, 2020
அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.

October 1, 2020
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

March 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x