பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக மாறுகிறதா கேரளா! பாலியல் கொடுமைகளில் முதலிடம்!

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத இடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் நவ்ஃபால் எனும் காமக்கொடூரன்.

மேலும் வெளியில் சொன்னால் கொலை சையது விடுவேன் என்றும் கூறியுள்ளான். மருத்துவமனைக்கு வந்த பிறகு அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவ நிர்வகித்திடம் கூறியுள்ளார். பின் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளது. புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் முடிவதற்குள் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவம் கேரளாவை உலுக்கியது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார். பின் அவரின் வீட்டினை சுற்றி மருந்து தெளிப்பது என சுகாதர பணிகளை மேற்கொள்ள ஒரு முறை அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார் சுகாதார ஆய்வாளர் பிரதீப் அப்போதே அந்த பெண்ணின் மீது கம வெறி கொண்டுள்ளார்.

இதனால் அடிக்கடி அந்த அப்பெண்ணின் வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்வதாக கூறி சென்று வந்துள்ளார். சுகாதார ஆய்வாளர்பிரதீப் இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது.அதனால் அவருக்கு குவாரன்டைன் முடிவடைந்த நிலையில், பரிசோதனை செய்துகொண்ட சான்றிதழை தனது வீட்டில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 3 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண் பிரதீப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாத சூழலில் பிரதீப் மட்டுமே இருந்துள்ளார். ஏற்கெனவே பெண் மீது வக்கிர பார்வையை வைத்திருந்த ஆய்வாளர் பிரதீப் அந்த பெண்ணை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் கடந்த கேரளாவில் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியது தொடர்பாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தது மேலும் பல வழக்குகளை கேரா அரசு மூடியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கையில் கேரள மாநிலத்தில் 1742 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக கேரள உள்ளது. இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது கேரளாவில் தான்.

Exit mobile version