சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

திமுக தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது என்னாச்சு? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அதே நேரத்தில்,அவர் கடந்த 9 ஆண்டுகளில் பாஜ., ஆட்சியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 67% வளர்ச்சி கண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,183 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் விலை 4,000 ரூபாயில் இருந்து 6,377 ரூபாயாக அதிகரித்து உள்ளது.

14 பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.143 உயர்த்தப்பட்டு, குவிண்டாலுக்கு ரூ.2183 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 2013-14 ஆண்டு உடன் ஒப்பிடும் போது, கடந்த 9ஆண்டுகளில் பாஜ., ஆட்சியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 67% வளர்ச்சி கண்டுள்ளது.இத்தருணத்தில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆகவும், கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை டன் ரூ.4ஆயிரமாகவும் உயர்த்தப்படும் எனக் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில், சொன்ன குறைந்தபட்ச ஆதரவு விலை என்னாச்சு? என்ற கேள்வியை, பல்வேறு தரப்பினர் இடையே எழுப்பி உள்ளது.

Exit mobile version