மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல் மாநிலம் ஹமிர்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக ஆங்கிலேயர்களைப் போல சாதி, மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்துகிறது.

சில நேரங்களில் அவர்கள் பிரதமர் மோடி பற்றி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது ஆட்சேபனைக்குரிய விஷயம். ஆனால் எத்தனை முறை இப்படி செய்தாலும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version