கொரோனாவால் உயிரிழந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர்! கொரோனாவின் கோரத்தாண்டவம்!

தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.ஏனென்றால் கொரோனாவை கையாளுவதில் திமுக அரசு தடுமாறிவருகிறது. இதனால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.

அங்கங்கே அழுகுரல் தான் தமிழகம் முழுவதும். மயானங்களில் இடமில்லை.. மருத்துவமனைகளில் இடமில்லை என தத்தளிக்கிறது தமிழகம். கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை. முதல் அலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் தற்போது 45 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தினம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 4000 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் கார்த்திகா வயது 29 . மருத்துவர் கார்த்திகாவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. . இதனை தொடர்ந்து கார்த்திகாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை வானகரத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட கார்த்திகாவுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதனால் கடந்த 19ஆம் தேதி கிரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த, அவர் அதிகாலை உயிரிழந்தார்.

Exit mobile version