5 மில்லியன் பார்வையாளர்கள்! தெறிக்க விடும் ருத்ரதாண்டவம்! வியப்பில் தமிழ் திரை உலகம்!

மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி தொடர்ந்து 3வது படம் ருத்ரதாண்டவம்.

கடந்த வருடம் முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்.

திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் கடந்தாண்டு படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.

திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக . தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எந்த விதமான சமூக பிரச்சனையை கையில் எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் 2021, ஆகஸ்ட் 24 வெளியானது!

ட்ரெய்லரில் போதை பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் சிறுவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சட் அதனை தடுப்பதுபோல் உள்ளது.

பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இணையத்தில் ருத்ரதாண்டவம் ட்ரைலர் கலக்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பெரிய நடிகர்களை மட்டும் கொண்டாடி வந்த நிலையில் தற்போது ருத்ரதாண்டவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யூடூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து 3 நாட்களாக முதலிடம் பெற்றது. தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த படம் தமிழக சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என தமிழ் சினிமா துறையினர் கருதுகிறார்கள்.

Exit mobile version