5,000 ஆண்டுகளாக ‘பாரத்’ மதச்சார்பற்ற நாடாக உள்ளது மோகன் பகவத் பேச்சு

பாரத் எனும் இந்த நாடு 5 ஆயிரம் ஆண்டுகளாக “மதச்சார்பற்ற நாடாக” உள்ளது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த செயற்பாட்டாளர் ரங்கா ஹரி எழுதிய நூல் வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மோகன் பகவத் பேசியதாவது: பாரதத்தில் பல்வேறு வேற்றுமைகள் உண்டு. ஆனால் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று நினைக்க வேண்டும். இது உலகத்துக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

நமது தேசிய ஒற்றுமைக்கு நம்முடைய தாய்நாடு முதன்மையானது. இந்த பாரத் 5 ஆயிரம் ஆண்டுகளாக மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்.

கடைசி மனிதனும் அறிவைப் பெற வேண்டும் என்பதற்காக சன்னியாசிகள் இந்த பாரதத்தை உருவாக்கினர்.

உலகத்தின் நன்மைக்காகவே பாரதம் படைக்கப்பட்டது. அவர்கள் சன்னியாசிகள் மட்டுமல்ல. இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டவர்கள் ஆவர். அவர்கள் இன்னும் உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு மோகவ் பகவத் பேசினார்.

Exit mobile version