சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசியதாவது:
- கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக உள்ளன
- மக்களை காக்க வேண்டும். அதேநேரத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
- கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்
- விவசாயம், சுயதொழில் செய்வோர் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் மீளும்
- இந்திய தொழில்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.
- தொழிலதிபர்கள் திறமையால் பொருளாதாரத்தை மீட்டெடுத்து விடலாம்.
- தற்சார்பு இந்தியா தான் நம் முன் உள்ள ஒரே வழி
- பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முதல் நோக்கமாக கொண்டுள்ளது.
- கரீப் கல்யாண் திட்டம் மூலம் 74 கோடி ஏழைக் பயனபெற்றுள்ளனர்
- மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது
- வளர்ச்சியை மீட்பதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்
- கொரோனாஅச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்செல்கிறது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில் திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.
- ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக உள்ளது
- ஏழை எளிய மக்களுக்கு 53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
- வைரசை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்
- 74 கோடி பேருக்கு ரேசன் பொருட்கள் விநியோகம்
- விவசாய பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலமும் விற்பனை செய்யலாம்.
- 8 கோடி பேருக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து முதலீடு அதிகரிக்கப்படும்
- அரசு எடுத்து வரும் நடவடிக்கையால், நிலக்கரி, எரிசக்தி, ஆராய்ச்சி மற்றும்தொழில்நுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன.
- கொரோனாவுக்கு எதிராக பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக அரசு உடனடியாக முடிவெடுத்தது. நாட்டிற்கு நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















