கடந்த வாரம் நான் அர்னாப் கோஸ்வாமியுடன் கலந்துக்கொண்ட ஆங்கில ஊடகமான Republic தொலைகாட்சி விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குறித்து “”An incompetent Chief Minister(MK Stalin) has put the city(Chennai) to shambles!” என்று பேசியிருந்தேன். இதற்கான தமிழாக்கம் “தகுதியற்ற ஒரு முதல்வர் சென்னை நகரையே சீரழித்துவிட்டார்!”இதற்கு சிலர் கோபித்துக் கொண்டனர். ஆனால், நான் தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த வாதத்தையும் வைப்பவனல்ல. காரணம் இல்லாமல் அப்படி சொல்லவில்லை என்பதற்கு சான்றாக மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாம்பலம் கால்வாயில் குப்பைகளை கொட்டி தி.நகர் முழுக்க மழைநீர் சென்றது போலவே பக்கிங்காம் கால்வாய் அடைக்கப்பட்டு வியாசர்பாடி, கொளத்தூர் முழுக்க வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த உண்மையை India Ahead Tamil ஊடகவியலாளர் Sandhya Ravishankar வெளிக்கொண்டு வந்துள்ளார்.
என் ஒரே கேள்வி. தமிழகத்தில் இத்தனை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் உள்ளீர்களே உங்களுக்கெல்லாம் குறைந்தபட்ச நேர்மை இருந்திருந்தால் இப்படி ஒரு தவறை செய்திருக்கும் தி.மு.க அரசை கேள்வி கேட்காமல் இருப்பீர்களா?
தமிழக மக்களுக்கு வேலை செய்கின்றீர்களா இல்லை தி.மு.க-வுக்காக பணி செய்கின்றீர்களா?ஓரு ஆங்கில தொலைகாட்சி வந்து தான் இங்கு சென்னை வீடுகளுக்கு மழை நீர் சென்றதற்கான காரணம் என்னவென்று கண்டுப்பிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய நிலைதான் இங்கு உள்ளதா?
தமிழக ஊடகங்களோ “மக்கள் நீச்சல் அடிக்கின்றனர், கொடைக்கானல் போல குளு குளு என உள்ளது” என வெட்கமின்றி தமிழக அரசின் கையாலாகாததனத்தை மறைக்கும் அளவு செய்தி வெளியிட்டனரே? என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் SG சூரியா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்,
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















