டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பேசியதாவது. இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரிவினைவாதிகளோ , தீவிரவாதிகளோ ஒரு அங்குல அளவு தீங்கு விளைவிப்பதை கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இனி எங்களது ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
எல்லை தாண்டி நடத்தப்பட்ட நமது தாக்குதல்கள் பற்றி உலக நாடுகள் பேசத்தொடங்கிவிட்டனர் . உலக அளவில் இந்தியாவின் பலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தை நாம் கையாண்டது, அகண்ட பாரதத்தை நோக்கிய பயணமாக பார்க்கப்படுகிறது. 2014 ஆண்டு மோடி பிரதமராக வரும் முன்பு, எங்கு பார்த்தாலும் தீவிரவாத தாக்குதல்கள் , கலவரங்கள் என நாடே அழிந்து கொண்டிருந்தது. முக்கியமாக எங்கு பார்த்தாலும் மக்களுக்காக போடப்பட்ட திட்டங்கள் ஏமாற்றப்பட்டு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மக்கள் பாஜகவிற்கு கொடுத்த வெற்றி , காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடியாக பார்க்கப்பட்டது.
பாஜகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் , உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது மோடி அரசுதான். தற்போதுள்ள கூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் , அதனை மீட்டு 2024 க்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதை அடைய நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என அமிட்ஷா கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















