Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.

Oredesam by Oredesam
September 6, 2024
in உலகம்
0
பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார்.பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைனும் அதற்கு ஒத்துழைத்தால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க ரஷ்யாவும் தயங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம் போர் தொடங்கிய நிலையில், அது ஆண்டுக் கணக்கில் நீடித்து வருகிறது. போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

இருப்பினும், ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து மறுத்தே வந்தது. இதற்கிடையே திடீரென ரஷ்ய அதிபர் புதின் தனது டோனை மாற்றி இருக்கிறார். மனமாற்றம்: ஆண்டுக் கணக்கில் போர் தொடரும் நிலையில், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளார். இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், புதினின் இந்த மனமாற்றம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்குப் பொருளாதார மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அங்கே புதின் பேசுகையில், “ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022இல் போடப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்க வேண்டும்” என்றார்.

இத்தனை காலம் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வந்த புதின், திடீரென உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி சமீபத்தில் தான் ரஷ்யாவுக்குச் சென்று புதினை சந்தித்திருந்தார். அதேபோல உக்ரைனுக்கு சென்று ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து இரு தலைவர்களையும் சந்தித்த நிலையில், புதினும் இந்தியா மத்தியஸ்தம் செய்து வைக்கலாம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

”போர் நிறுத்த பேச்சை தொடர உக்ரைன் ஆர்வமாக இருந்தால், அதில் எனக்கும் சம்மதமே,” என்றார்.

இது குறித்து ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டுமின்றி அமெரிக்காவுடனும் சுலபமாக பேசக்கூடியவர் இந்திய பிரதமர் மோடி..இருதரப்பின் எண்ணங்களையும் நேரடியாக கேட்டறிந்து, அமைதிப் பேச்சை வழிநடத்தவும் மோடியால் முடியும். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கை வெளிப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கும், பிரேசிலுக்கும் இரு தரப்புடனும் விவாதிக்க வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதால், புடின் குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இந்தியா மட்டுமே நிற்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள்! மக்களுக்கு நம்பிக்கை அளித்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா

இந்தியாவில் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள்! மக்களுக்கு நம்பிக்கை அளித்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா

June 11, 2021
இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் அண்ணாமலை ஆவேசம்.

கச்சத்தீவு வைத்து அடுத்த நாடகத்தை தொடங்கி ஸ்டாலின் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

April 2, 2025
கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

June 17, 2021

ராசிபலன் 02-05-2020 சனிக்கிழமை

May 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x