Wednesday, November 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்

Oredesam by Oredesam
March 24, 2020
in செய்திகள்
0
தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்க வேண்டும்- பிரதமர்
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். 11 மொழிகளைச் சேர்ந்த தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகையாளர்கள் 14 இடங்களில் இருந்து இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

செய்திகளை நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் பரப்பும் அளப்பரிய பங்களிப்பை ஊடகங்கள் செய்துவருவதாக பிரதமர் கூறினார். ஊடக கட்டமைப்பு இந்தியா முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கட்டமைப்பு, ஊடகங்கள் சரியான தகவலை சிறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று, சவாலுக்கு எதிரான போராட்டத்தை முக்கியத்துவம் வாயந்ததாக மாற்றியுள்ளது.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

செய்தித்தாள்கள் பெரும் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன என்றும், ஒவ்வொரு பத்திரிகையின் உள்ளூர் பக்கம் ஏராளமானவர்களால் அதிகமாக வாசிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். எனவே, இந்தப் பக்கத்தில் வெளியாகும் கொரோனோ வைரஸ் பற்றிய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு பரப்பப்படுவது அவசியமாகிறது. பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும். இந்தத் தகவல்கள் செய்தித்தாள்களிலும், அவற்றின் இணையதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு, தடை உத்தரவு போன்ற சமயங்களில் ,அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் பக்கங்களில் இடம்பெற வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

ஊடகங்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பு பாலமாகச் செயல்பட்டு, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் தொடர்ச்சியான தகவல்களைத் தரவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தி, மாநில அரசுகளின் ஊரடங்கு, அடைப்பு உத்தரவுகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்களை சர்வதேச தரவுகள், பிறநாடுகளின் ஆராய்ச்சிகள் பற்றியும் செய்தித்தாள்களில்  வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்ட உணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர், வதந்திகள் , அவநம்பிக்கை, எதிர்மறை தகவல்கள் பரவுவதைச் சமாளிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். கொவிட் -19 தாக்கத்தை முறியடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பிரதமர் தமது எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்தி நாட்டை முன்னணியில் வழிநடத்திச் செல்வதாக, அச்சு ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ளவர்கள் பாராட்டினர். ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலான நேர்மறையான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற பிரதமரின் யோசனைகளைச் செயல்படுத்த பாடுபடுவோம் என அவர்கள் உறுதியளித்தனர். அச்சு ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்காக   பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தத் தீவிரமான சவாலை ஒன்று சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறைகூவலை நாடு முழுவதும் பின்பற்றுவதாக அவர்கள் கூறினர்.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் அளித்த தகவல்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடைக்கோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்  சமூக பொறுப்புணர்வை மறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது கட்டாயம் என அவர் அறிவுறுத்தினார்.

அரசின் தீவிரக்கண்காணிப்பு, நடவடிக்கை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, பீதி பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்காக  பத்திரிகையாளர்களுக்கு  சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் நன்றி தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில் தவறான தகவல்கள் பரவுவதை அச்சு ஊடகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

CAA NRC விழித்துக்கொண்ட இங்கிலாந்த் இந்திய நிலை என்ன ! இந்து முண்ணனி கேள்வி.

CAA NRC விழித்துக்கொண்ட இங்கிலாந்த் இந்திய நிலை என்ன ! இந்து முண்ணனி கேள்வி.

June 11, 2024
Vanathi srinivasan Update

கோவில் தூய்மை பணியில் களமிறங்கிய வானதி சீனிவாசன்…

January 18, 2024
ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

உலகில் ஒரு பெரும் போர் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌.

October 2, 2020
கவுன் போட்டு வந்த கமல்… வாம்மா துரையம்மா…. வச்சு செய்த நெட்டிசன்கள்..

கவுன் போட்டு வந்த கமல்… வாம்மா துரையம்மா…. வச்சு செய்த நெட்டிசன்கள்..

November 15, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x